மும்பை தோல்விக்கு முக்கிய காரணமாக மாறிய குயிண்டின் டி காக்! கடுப்பில் ரசிகர்கள்: வைரலாகும் புகைப்படம்
சென்னை அணிக்கெதிரான போட்டியில் மும்பையின் தோல்விக்கு முக்கிய காரணமாக குயிண்டன் டி காக் மாறியுள்ளார்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் நேற்று முதல் ஒத்தி வைக்கப்பட்ட ஐபிஎல் தொடர் துவங்கியது. இதில் நேற்றைய ஆட்டத்தில், மும்பை மற்றும் சென்னை அணிகள் மோதின.
முதலில் ஆடிய சென்னை அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 156 ஓட்டங்கள் எடுக்க, அதன் பின் ஆடிய மும்பை அணி 20 ஓவர் முடிவில் 136 ஓட்டங்கள் எடுத்து 20 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.
இப்போட்டியில் சென்னை அணியின் ருத்ராஜ் கெய்ட்வாட் 58 பந்தில் 88 ஓட்டங்கள் எடுத்து சென்னை அணியின் வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக அமைந்தார். அதுவே மும்பை அணியின் விக்கெட் கீப்பரான குயிண்ட டி காக் அந்தணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்துவிட்டார்.
ஏனெனில் சென்னை அணி முதலில் ஆடிய போது, ஒரு கட்டத்தில் 9 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 35 ஓட்டங்கள் எடுத்து தடுமாறிக் கொண்டிருந்தது.
அப்போது மும்பை அணியின் சுழற்பந்து வீச்சாளரான Rahul Chahar வீசிய ஓவரை ருத்ராஜ் கெய்ட்வாட் ஆப் திசையில் கட் செய்ய பார்க்க, ஆனால் பந்தானது பேட்டின் விளிம்பில் பட்டு, விக்கெட் கீப்பரான குயிண்டன் டி காக் கையில் சென்றது.
ஆனால், குயிண்டன் டி காக்கோ, அந்த கேட்சை விட்டதால், அதுவே கடையில் மும்பை அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்துவிட்டது. அதன் பின் கடைசி வரை ஆடிய ருத்ராஜ் கெய்ட்வாட் 88 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இதுவே குயிண்டன் டி காக் கேட்ச் பிடித்திருந்தால், போட்டியின் முடிவே மாறியிருக்கும் என்று மும்பை அணி ரசிகர்கள் குமுறி வருகின்றனர்.