டசின் கணக்கான பயணிகளைத் தவிக்கவிட்டு லண்டன் பறந்த Ryanair விமானம்
கிரீஸிலிருந்து பிரித்தானியாவுக்குச் சென்ற Ryanair விமானம் ஒன்று, கடவுச்சீட்டுச் சோதனைப் பகுதியில் நிலவிய மிக நீண்ட வரிசைகள் காரணமாக, பல டசின் பயணிகளைத் தவிக்கவிட்டு புறப்பட்டுச் சென்றுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தின்
ஞாயிற்றுக்கிழமையன்று லண்டன் லூட்டன் செல்லும் விமானத்தில் முன்பதிவு செய்திருந்த கிட்டத்தட்ட 50 பயணிகள் தவிப்புக்குள்ளானதைத் தொடர்ந்து, ஏதென்ஸ் சர்வதேச விமான நிலைய அதிகாரிகள் இதில் தலையிட வேண்டிய நிலை ஏற்பட்டது.

எல்லையில் முன்னெடுக்கப்பட்ட சோதனை தாமதங்களே இந்தக் குழப்பத்திற்குக் காரணம் என ரயன்ஏர் நிறுவனம் குற்றம் சாட்டிய நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்தின் நுழைவு-வெளியேறு முறை (EES) அறிமுகப்படுத்தப்பட்டதன் காரணமாக நெரிசல் ஏற்பட்டதாக விமான நிலையம் விளக்கமளித்தது.
ஏப்ரல் 10 முதல் நடைமுறைக்கு வந்துள்ள புதிய விதிமுறைகளின்படி, ஷெங்கன் பகுதிக்குள் நுழையும் பிரித்தானியப் பயணிகள் கைரேகைகள் மற்றும் முகத்தை அடையாளம் காணும் படங்கள் போன்ற பயோமெட்ரிக் விவரங்களைப் பதிவு செய்ய வேண்டும்.
இதனிடையே, சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் தெரிவிக்கையில், விமான நிலையத்தின் பாதுகாப்புச் சோதனை மற்றும் கடவுச்சீட்டுச் சரிபார்ப்பு ஆகிய இரண்டிலுமே நூற்றுக்கணக்கான மக்கள் அடங்கிய மிகப்பெரிய வரிசை காத்திருந்தது என்றார்.
ஆத்திரமடைந்த பயணிகள், தங்களை விமானத்தில் ஏறுவதற்கு அனுமதிக்குமாறு ரயன்ஏர் நிறுவனத்திடம் கெஞ்சிக்கொண்டிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, விமானத்தில் ஏறாத பயணிகளின் உடைமைகள் அதிலிருந்து இறக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமை அன்று அந்த விமானம் ஒரு மணி நேரம் தாமதமாகப் புறப்பட்டுச் சென்றதாகத் தெரியவருகிறது.
குழப்பமான வரிசை
விமான நிலையங்களில் நிலவும் குழப்பமான வரிசைகளால் பயணிகள் தங்கள் விமானங்களைத் தவறவிடுவது இது முதல் முறையல்ல. அண்மையில் பிரிட்டிஷ் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று 150 பயணிகளை ஏற்றிக்கொள்ளாமலே துலூஸில் விட்டுச் சென்ற சம்பவம் ஒன்று நடந்தது.
மே 30 அன்று லண்டன் ஸ்டான்ஸ்டெட் செல்லும் FR282 விமானத்திற்கான நுழைவாயிலை பயணிகள் சரியான நேரத்தில் சென்றடைய முடியவில்லை என்றே கூறப்படுகிறது.

விமானத்தில் பயணம் செய்த பெண் ஒருவர், விமான நிலையத்தின் சூழல் முற்றிலும் குழப்பம் நிறைந்ததாக இருந்ததாகவும், பாதுகாப்புச் சோதனைக்குப் பிறகு தாமதங்கள் தொடங்கியதாகவும் கூறினார்.
அந்தப் பகுதியில் சுமார் 400 அல்லது 500 பேர் வரிசையில் நின்றுகொண்டிருந்ததாகவும், அங்கு முறையான ஏற்பாட்டு அமைப்பு எதுவும் இல்லை என்றும் அந்தப் பயணி கூறினார்.
இதற்கிடையில், மிலன் பெர்காமோவிலிருந்து மான்செஸ்டருக்குச் சென்ற ரயன்ஏர் விமானம் ஒன்று, ஏப்ரல் 16 அன்று பல பயணிகளை ஏற்றாமலேயே புறப்பட்டுச் சென்றுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |