மனிதகுலம் அதை நிறுத்தாவிட்டால்... பாபா வங்காவை அடுத்து பெண் ஒருவரின் திகைக்கவைக்கும் கணிப்பு
பாபா வங்காவை அடுத்து ரியோ தட்சுகி என்ற பெண் ஒருவர் 2025ல் நடக்கவிருக்கும் பெரிய பேரழிவு பற்றிய எச்சரிக்கையை வெளியிட்டு உறைய வைத்துள்ளார்.
அனைத்தையும் நிறுத்த வேண்டும்
ரியோ தட்சுகி என்பவர் கடந்த பல தசாப்தங்களாக ஆவி ஒன்றுடன் தொடர்பில் இருப்பதாக அதிர்ச்சியூட்டும் தகவல் ஒன்றை கூறியுள்ளார். மேலும் மனிதகுலம் மொத்தமாக அழிந்துவிடும் என்றும் அனைத்தையும் நிறுத்த வேண்டும் என்றும் அந்த ஆவி எச்சரித்துள்ளதாக ரியோ தட்சுகி தெரிவித்துள்ளார்.
ஏழு என பெயரிடப்பட்டுள்ள அந்த ஆவியுடன் முதல்முறை தொடர்புகொண்டு அது தோல்வியில் முடிய, இரண்டாவது முறையாக 1945 ஆம் ஆண்டுக்குப் பிறகு 29,149 நாட்களில் தொடர்பு கொண்டதாகவும், அது 2025 மே 27ம் திகதி என்றும்,
அப்போது அந்த ஆவியிடம் மனிதகுலம் மாறவில்லை என்றால் என்ன நடக்கும் என்ற கேள்விக்கு, அனைவரும், 7 ஐ சேமிக்கவும் என குறியீடாக பதிலளித்துள்ளதாகவும் ரியோ தட்சுகி குறிப்பிட்டுள்ளார்.
பூகம்பமும் சுனாமியும்
மட்டுமின்றி, ரஷ்யா - உக்ரைன் போர் மற்றும் இஸ்ரேல் - காஸா போர் நடக்கும் இந்த சூழலில் அந்த ஆவியின் குறியீடான பதில் பீதியை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே 2025 ல் அதிர்ச்சியூட்டும் பூகம்பங்கள் மற்றும் ஐரோப்பாவில் பொருளாதார வீழ்ச்சி ஏற்படும் என்று பாபா வங்காவும் கணித்திருந்தார். இது தற்போது நிஜமாகியுள்ளது.
மியான்மரைத் தாக்கிய பேரழிவு தரும் நிலநடுக்கம் மற்றும் ஐரோப்பாவில் குழப்பத்தை ஏற்படுத்திய ரஷ்யா-உக்ரைன் போர் என குறிப்பிடுகின்றனர். ஆனால் 2025 ஆம் ஆண்டில் பேரழிவு தரும் பூகம்பமும் சுனாமியும் ஏற்படும் என்று ரியோ தட்சுகியும் தமது கணிப்பை வெளியிட்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |