கொரிய நாடுகளுக்கிடையிலான உறவில் சுமூகம்: ஏழு முக்கிய கொள்கை நோக்கங்கள் தயாரிப்பு
வட கொரியாவுடனான உறவை இயல்பாக்க தென் கொரியா முயற்சிப்பதாக அந்த நாட்டின் ஒருங்கிணைப்பு அமைச்சகம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.
வட கொரியா- தென் கொரியா இடையிலான பதற்றம்
வட கொரியா சமீபத்திய சில மாதங்களாக தொடர்ந்து ஏவுகணை பரிசோதனைகளை செய்து வரும் நிலையில், தென் கொரியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளிடையே கடுமையான பதற்றம் நிலவி வருகிறது.
வட கொரியாவின் இந்த தொடர்ச்சியான ஏவுகணை பரிசோதனைகளை தொடர்ந்து அமெரிக்கா, ஜப்பான் மற்றும் தென் கொரியா ஆகிய மூன்று நாடுகளும் இணைந்து அவ்வப்போது கூட்டு ராணுவ பயிற்சியை மேற்கொண்டு வருகிறது.
EPA
வட கொரியாவின் இந்த நடவடிக்கைகள் மூலம் தன்னைத் தனிமைப்படுத்திக் கொள்கிறது என தென் கொரியா ஜனாதிபதி யூன் சுக்-யோலின் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில் குறிப்பிட்டு இருந்தார்.
இருப்பினும் வட கொரியா தொடர்ந்து கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள், மற்றும் பயங்கர ஆயுதங்களை பரிசோதித்து வருகிறது.
உறவை இயல்பாக்க முயற்சி
இந்நிலையில் தென் கொரியா நேரடியான மற்றும் மறைமுக வழிகளை பயன்படுத்தி வட கொரியாவுடனான உறவை இயல்பாக்க முயற்சிக்கும் என்று அந்த நாட்டின் ஒருங்கிணைப்பு அமைச்சகம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.
2023 ஆம் ஆண்டிற்கான குறிப்பிடத்தக்க பணிகள் குறித்து ஜனாதிபதிக்கு அளித்த அறிக்கையில், வட கொரியாவுடனான உறவுகளை மேம்படுத்துவதை மையமாகக் கொண்டு ஏழு முக்கிய கொள்கை நோக்கங்களை கொரிய நாடுகளுக்கிடையேயான விவகாரங்களுக்குப் பொறுப்பான அமைச்சகம் வகுத்துள்ளது.
"கொரிய நாடுகளுக்கிடையேயான உறவுகளை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகளை திறக்கும் முயற்சியில் சிவில் குழுக்கள் மற்றும் சர்வதேச அமைப்புகள் மூலம் வட கொரியாவுடன் நேரடி மற்றும் மறைமுக தொடர்பை பெற அரசாங்கம் திட்டமிட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.