உக்ரைனுக்கு அழிவு ஆயுதங்கள் எதுவும் வழங்கவில்லை: திடீர் அறிக்கை வெளியிட்ட நாடு
உக்ரைனுக்கு எத்தகைய அழிவு ஆயுதங்களையும் தென் கொரியா வழங்கவில்லை என்று அந்த நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் திங்கட்கிழமை தெரிவித்துள்ளது.
உக்ரைனுக்கு உதவி
உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் உலக அளவிலான நெருக்கடியை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், போரினால் பாதிக்கப்பட்ட உக்ரைனுக்கு பல்வேறு நாடுகளும் நிதி மற்றும் இராணுவ உதவிகளை அறிவித்து வருகின்றன.
அந்த வகையில் தென் கொரிய ஜனாதிபதி யூன் சுக் யோல்(Yoon Suk-yeol) போரினால் பாதிக்கப்பட்ட உக்ரைன் நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருந்தார்.
PBS
அப்போது உக்ரைனுக்கான பாதுகாப்பு, மனிதாபிமான மற்றும் மறுகட்டமைப்பு உதவி ஆகியவற்றுக்கு தென் கொரியா வழங்கும் உதவிகளை அதிகரிக்க ஜனாதிபதி ஒத்துக் கொண்டார்.
அழிவு ஆயுதங்கள் வழங்கவில்லை
இந்நிலையில் உக்ரைனுக்கு தென் கொரியா மனிதாபிமான உதவிகளை அதிகரிக்க ஒப்புக் கொண்டதே தவிர, அழிவு ஆயுதங்களை வழங்குவது தொடர்பான எந்த ஒப்பந்தமும் மேசையில் வைக்கப்பட்டுள்ளது என்று அர்த்தமல்ல என தென் கொரிய பாதுகாப்பு அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.
Kyodo
இதற்கிடையில் தென் கொரியாவின் நிலையில் எந்தவொரு மாற்றமும் இல்லை, அதே சமயம் அழிவு ஆயுதங்கள் எதையும் தென் கொரியா வழங்காது என்றும் பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ஜியோன் ஹா-கியூ தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |