வீழ்ச்சியில் இருந்து பலமாகி வென்றிருக்கிறோம்! நண்பர் டிராவிட்டிற்காக மகிழ்ச்சியடைகிறேன் - சச்சின் டெண்டுல்கர்
இந்திய கிரிக்கெட் அணி டி20 உலகக்கிண்ணத்தைக் கைப்பற்றியது குறித்து முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் நெகிழ்ச்சி பதிவிட்டுள்ளார்.
இந்திய அணி வெற்றி
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 உலகக்கிண்ண இறுதிப்போட்டியில் இந்திய அணி 7 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதன்மூலம் இரண்டாவது முறையாக டி20 உலகக்கிண்ணத்தைக் இந்தியா கைப்பற்றியது. முன்னாள் வீரர்கள், ரசிகர்கள் என பலரும் இந்திய அணி வெற்றி பெற்ற மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
ஜாம்பவான் வீரர் சச்சின் டெண்டுல்கர் தனது எக்ஸ் பதிவில் இந்திய அணி வெற்றி பெற்றது குறித்து கூறுகையில், ''இந்திய அணியில் சேர்க்கப்பட்ட ஒவ்வொரு நட்சத்திரமும், நம் நாட்டின் நட்சத்திரக் கண்களைக் கொண்ட குழந்தைகளை அவர்களின் கனவுகளுக்கு ஒரு படி மேலே செல்ல தூண்டுகிறது.
இந்தியா 4வது நட்சத்திரம் மற்றும் நமது இரண்டாவது டி20 உலகக்கிண்ணத்தை வென்றுள்ளது. மேற்கிந்திய தீவுகளில் இந்திய கிரிக்கெட்டின் வாழ்க்கை முழுவதுமாக வருகிறது.
2007ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கிண்ண வீழ்ச்சியில் இருந்து, 2024யில் கிரிக்கெட்டில் பலமாக மாறி 2024 டி20 உலகக்கிண்ணத்தை வென்றிருக்கிறது.
2011 உலகக்கிண்ண வெற்றியைத் தவறவிட்ட நண்பர் ராகுல் டிராவிட்டை நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன். ஆனால், இந்த டி20 உலகக்கிண்ண வெற்றிக்கு அவரது பங்களிப்பு அளப்பரியது. நான் அவருக்காக மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்'' என தெரிவித்துள்ளார்.
Every star added to the Team India jersey inspires our nation’s starry-eyed children to move one step closer to their dreams. India gets the 4th star, our second in @T20WorldCup.
— Sachin Tendulkar (@sachin_rt) June 29, 2024
Life comes full circle for Indian cricket in the West Indies. From our lows in the 2007 ODI World… pic.twitter.com/HMievynpsE
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |