சகாரா பாலைவனத்தில் வெள்ளம்! செயற்கைக்கோள் படங்கள் காட்டும் அரிதான காட்சி
சகாரா பாலைவனத்தில் பெய்த எதிர்பாராத கனமழை காரணமாக அரிதினும் அரிதான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
சகாரா பாலைவனத்தில் வெள்ளம்
உலகின் மிக வறண்ட பகுதிகளில் ஒன்றான சகாரா பாலைவனத்தில் எதிர்பாராத மிகப்பெரிய கனமழை கொட்டித் தீர்த்தது.
இந்த கனமழை காரணமாக சகாரா பாலைவனத்தில் உள்ள பனை மரங்களுக்கும் மணல் குன்றுகளுக்கும் இடையில் நீல ஏரிகள் தோன்றிய அற்புதமான காட்சியை உருவாக்கி உள்ளது.
Sahara desert witnesses first floods in 50 years
— Ravi Chaturvedi (@Ravi4Bharat) October 12, 2024
A rare deluge of rainfall left blue lagoons of water amid the palm trees and sand dunes of the Sahara desert, nourishing some of its driest regions with more water than they had seen in decades. pic.twitter.com/rqI3oSLHrd
செயற்கைக்கோள் படங்கள், அரை நூற்றாண்டு காலமாக வறண்டு கிடந்த பிரபலமான ஏரிப் படுக்கையான “இரிக்கி ஏரி” நிரம்பியதை காட்டுகிறது.
மொராக்கோ வானிலை ஆய்வு மையத்தின் அதிகாரிகள் வழங்கிய தகவலின் படி, டகோனைட் கிராமத்தில் செப்டம்பர் மாதம் 100 மிமீ மழை 24 மணி நேரத்தில் பெய்துள்ளது.
மிகப்பெரிய குறுகிய நேரத்தில் இவ்வளவு மழைப்பொழிவு பதிவாகி கிட்டத்தட்ட 30 முதல் 50 ஆண்டுகள் ஆகிவிட்டது என்று மொராக்கோ வானிலை ஆய்வு மையத்தின் அதிகாரி ஹூசின் யூபெப் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |