பிரித்தானியாவில் 8,000 நெருங்கும் சிறார் பாதிப்பு எண்ணிக்கை: குழப்பத்தில் மருத்துவ நிபுணர்கள்
பிரித்தானியாவில் வழக்கத்தைவிட மூன்று மடங்கு அதிக எண்ணிக்கையில் ஸ்கார்லெட் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை மூத்த அதிகாரிகள் அதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.
லேசான அறிகுறிகள் மட்டுமே
பிரித்தானியா முழுவதும் Strep A பாதிப்புக்கு இதுவரை 19 சிறார்கள் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளனர். லேசான அறிகுறிகள் மட்டுமே காணப்பட்ட சிறார்கள் திடீரென்று மரணமடைந்துள்ளதும், நாடு முழுவதும் அதிகரிக்கும் பாதிப்பு எண்ணிக்கையும் குழப்பமாக உள்ளது என பிரித்தானியாவின் UKHSA அமைப்புக்கான ஆலோசகர் சூசன் ஹாப்கின்ஸ் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
@gofundme
மேலும், கடந்த சில நாட்களுக்கான தரவுகள் பதிவு செய்யப்பட்டால், பாதிப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்றே சூசன் ஹாப்கின்ஸ் குறிப்பிட்டுள்ளார். Strep A பாதிப்பை பொறுத்தமட்டில் நான்கு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளில் 111 பேர்களுக்கு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் ஐந்தில் இருந்து 9 வயது வரையான சிறார்களில் 74 பேர்களுக்கு Strep A பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், மிகவும் தீவிரமானதும் வழக்கத்துக்கு மாறான தொற்றாகவும் இது உள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
Strep A பாதிப்பு உறுதி
மேலே குறிப்பிட்ட எண்ணிக்கையானது தீவிர சிகிச்சை பெறும் சிறார்கள் தொடர்பில் பதிவானவை எனவும், Strep A பாதிப்பு உறுதி செய்யப்பட்டும், சிகிச்சையால் கட்டுப்படுத்தப்பட்ட சிறார்கள் எண்ணிக்கை அதிகம் எனவும் சூசன் ஹாப்கின்ஸ் குறிப்பிட்டுள்ளார்.
@getty
மேலும், 2 மற்றும் 3 வயதுடைய அனைத்து சிறார்களுக்கும் காய்ச்சல் தொடர்பில் மூக்குவழியான தடுப்பூசி செலுத்தப்பட்டு வருவதாகவும், இதுவரை 37.4% மட்டுமே 2 வயது சிறார்கள் மூக்குவழியான தடுப்பூசி மருந்து பெற்றுக்கொண்டுள்ளதாகவும், 3 வயது சிறார்கள் 39.5% பெற்றுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பாடசாலைக்கு செல்லும் சிறார்களுக்கு அவர்களின் பாடசாலையிலேயே காய்ச்சலுக்கான தடுப்பூசி அளிக்கப்படுகிறது.
ஸ்கார்லெட் காய்ச்சலை பொறுத்தமட்டில் தீவிரமான காய்ச்சல் இருக்கும் எனவும், தொண்டை வலி அல்லது புண், கழுத்து வீங்கிய நிலை, 12 முதல் 48 மணி நேரத்திற்கு பின்னர் உடலில் வேனற்கட்டி காணப்படும் எனவும் மருத்துவர்கள் விளக்கமலித்துள்ளனர்.