பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை: வெளியான முக்கிய அறிவிப்பு
சுதந்திரப் போட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவு நாளை முன்னிட்டு ஈரோடு, திருப்பூர் மற்றும் சேலம் மாவட்டத்தில் நாளை(ஆகஸ்ட் 3ம் தேதி) உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவு தினம் ஆடி 18ம் நாளான நாளை 3ம் தேதி அனுஷ்டிக்கப்படுகிறது.
இதன் காரணமாக அன்றைய தினம் திருப்பூர், ஈரோடு மற்றும் சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
இதனை ஈடும் செய்யும் வகையில் வரும் 12 ம் தேதியன்று வேலை நாளாக கடைபிடிக்கப்படும் என ஈரோடு மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.