புலிகளின் நீர்மூழ்கி ரகசியங்கள் - புலிகள் இன்று இருந்திருந்தால்..
இலங்கையின் காலி கடற்பரப்பில், ஈரானின் ஐரிஸ் தேனா(Iris Dena) என்ற போர் கப்பலை, அமெரிக்கா நீர்மூழ்கி கப்பலின் மூலம் தாக்கி மூழ்கடித்துள்ளது.
இந்த தாக்குதலில் 30 பேர் காயமடைந்துள்ள நிலையில், 87 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது.
இரண்டாம் உலகப் போருக்கு பின் முதல்முறையாக எதிரி கப்பலை டார்பிடோ (நீர்மூழ்கி கப்பலின் குண்டு) மூலம் வீழ்த்துவது இதுவே முதல்முறை என்று அமெரிக்க பாதுகாப்புதுறை செயலாளர் ஹெக்செத் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம், மத்திய கிழக்கில் நடைபெற்று வரும் ஈரான் இஸ்ரேல் போரானது இந்திய பெருங்கடல் வரை விரிவடைந்துள்ளது.
புலிகளின் நீர்மூழ்கி தொழில்நுட்பம்
விடுதலைப்புலிகளுடனான போருக்கும், தற்போதயை உலகளாவிய போர் சூழலுக்கும் இடையே பல்வேறு விதமான மாற்றங்கள் காணப்படுகிறது.
விடுதலைப்புலிகளின் மினி நீர்மூழ்கிக்கப்பல்கள் ஒரு மறைக்கப்பட்ட வரலாறு ஆகும்.

விடுதலைப்புலிகளின் கடற்புலிகள் ஒரு மரபுசாரா கடற்படையாக செயல்பட்டு வந்தது.
அவர்களிடம் முழு அளவிலான நீர்மூழ்கி கப்பல் இல்லாவிட்டாலும், அரை நீர்மூழ்கி கப்பல்கள்(Semi Sub Marines) மற்றும் சிறிய ரக நீர்மூழ்கி கப்பலைகளை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார்கள்.
2009 ஆம் ஆண்டில் முல்லைத்தீவில் கைப்பற்றப்பட்ட நீர்மூழ்கி கட்டுமானங்கள் அவர்கள் ரகசியமாக நீருக்கடியில் செல்லும் கலங்களை உருவாக்க முயன்றதை உறுதிப்படுத்தியிருந்தது.
இவை பெரும்பாலும் தாக்குதலுக்கு பயன்படுத்தப்படுவதை விட ஆயுதங்களை இலங்கை கடற்படைக்கு தெரியாமல் நிலங்களுக்கு கொண்டு செல்ல (Logistics) மற்றும் தற்கொலை தாக்குதல்களை ரகசியமாக முன்னெடுப்பதற்கு வடிவமைக்கப்பட்டிருந்தது.

அன்றைய காலகட்டத்தில் இலங்கையிடம் நீர்மூழ்கி கப்பல்களை கண்டறியும் மேம்பட்ட சோனார் தொழில்நுட்பங்களோ அல்லது நீர்மூழ்கி எதிர்ப்பு போர் கப்பல்களோ போதுமானதாக இருக்கவில்லை.
அப்போது புலிகளின் இந்த தொழில்நுட்பத்தை பாரிய அச்சுறுத்தலாகவே இலங்கை அரசு பார்த்தது.
இலங்கை கடற்படை அப்போது ஒரு கடலோர பாதுகாப்பு படை என்ற நிலையிலே தான் நீண்டகாலமாக இருந்தது. ஒரு நீர்மூழ்கிக்கப்பலை பராமரிப்பதற்கான செலவு அல்லது நீர்மூழ்கிக்கப்பலுக்கான ஆழ்கடல் தொழில்நுட்பதிற்கு ஆகும் செலவு அப்போதைய இலங்கை பொருளாதாரத்திற்கு அப்பாற்பட்டதாக இருந்தது.

புலிகளின் படகுகளை தடுக்க வேகமான கப்பல்கள் தேவைப்பட்டதால், நீர்மூழ்கி திறனில் இலங்கை அரசு கவனம் செலுத்தவில்லை.
புலிகளின் காலத்தில் இலங்கை கடற்பரப்பு ஒரு கெரில்லா போர் முனையாக இருந்து வந்தது. தற்போது அது வல்லரசுகளின் நேரடி மோதல் களமாக மாறியுள்ளது.
ஈரான் கப்பல் மீதான அமெரிக்காவின் இந்த நீர்மூழ்கி தாக்குதல், இனி இந்திய பெருங்கடலில் நீர்மூழ்கி கப்பல்களின் நடமாட்டம் மற்றும் கண்காணிப்பு அவசியம் என்பதை உணர்த்துகிறது.
புலிகள் இப்போது இருந்திருந்தால்..
2009 ஆம் ஆண்டிலே ஒரு அரசற்ற கிட்டதட்ட நடைமுறை அரசாக இருந்த விடுதலைப்புலிகள், தற்போதைய 2026 ஆம் ஆண்டின் நவீன ஆயுத யுகத்தில் இருந்திருந்தால் அவர்களின் கடற்படை உலக நாடுகளுக்கே ஒரு சவாலாக அமைந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
அன்றைய காலகட்டத்திலே மினி நீர்மூழ்கி கப்பல்களை உருவாக்கியிருந்த புலிகள், தற்போது இருந்திருந்தால் மனிதர்கள் இல்லாத நீர்மூழ்கி டிரோன்களை உருவாக்கியிருப்பார்கள்.
இன்றைய காலக்கட்டத்தில் கடலில் மிதக்கவிடப்படும் Smart Mines கப்பல்களை தேடி சென்று தாக்கும் வல்லமை உடையவை. புலிகள் இருந்திருந்தால் நிச்சயம் இதனை பயன்படுத்தி இருப்பார்கள்.
மேலும், ஹௌதி கிளர்ச்சியாளர்கள் பயன்படுத்தும் கடல்சார் ஏவுகணைகளை பயன்படுத்தி இருப்பார்கள். அதன் மூலம், நிலப்பரப்பில் இருந்தே ஆழ்கடலில் உள்ள போர் கப்பல்களை தாக்கி இருப்பார்கள்.
அதேபோல், ஈரான் - இஸ்ரேல், ரஷ்யா - உக்ரைன் போரில் பெரும் பங்கு வகிக்கும் மலிவு விலை டிரோன்கள் மூலம் கோடிக்கணக்கான மதிப்புள்ள ராணுவ வளங்களை தாக்கும் தொழில்நுட்பத்தை கையாண்டிருப்பார்கள். வான்புலிகள் மற்றும் கடற்புலிகள் ஒருங்கிணைந்து ட்ரோன் தாக்குதலை மேற்கொண்டிருப்பார்கள்.
விடுதலைப்புலிகள் புத்தாக்கம் செய்வதில் சர்வதேச அளவில் புகழ் பெற்றவர்கள். புலிகள் இன்றைய காலகட்டத்தில் நவீன ஆயுதங்களுடன் இருந்திருந்தால், இந்திய பெருங்கடலின் பாதுகாப்பு வரைபடம் மாறியிருக்கும்.
அமெரிக்கா, ரஷ்யா போன்ற வல்லரசுகள் பயன்படுத்தும் போர் தந்திரங்களை பயன்படுத்தியிருப்பார்கள்.
2009 ஆம் ஆண்டுக்கு முன்னர் ஒரு பலமான தற்காப்பு மற்றும் தாக்குதல் கட்டமைப்பை இலங்கை கடற்பரப்பில் கொண்டிருந்தார்கள். இன்று அவர்கள் நவீன ஆயுதங்களுடன் இருந்திருந்தால், நவீன ரேடார், டிரோன் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி கடற்பரப்பை கண்காணித்திருப்பார்கள்.
இலங்கையின் கடல் எல்லைக்கு அருகே அமெரிக்கா நீர்மூழ்கி வருவதை முன்னதாகவே கண்டறிந்திருப்பார்கள். ராணுவ ரீதியாக அந்நிய கப்பல் தங்கள் பிராந்திய எல்லைக்குள் வருவதை தடுத்திருப்பார்கள்.
புலிகள் நவீன ஏவுகணைகளுடன் இருந்திருந்தால், அமெரிக்கா இலங்கை கடற்பரப்பிற்கு அருகே வந்து இது போல் தாக்குதல் நடத்த தயங்கி இருக்கும். சர்வதேச நாடுகள் அத்துமீறலை மேற்கொள்ள எஞ்சியிருக்கும்.
உதாரணமாக இன்று செங்கடலில் ஹௌதி கிளர்ச்சியாளர்கள் இருப்பதால், பிற நாடுகள் அங்கு தங்களின் கப்பல்களை அனுப்ப அஞ்சுகின்றன. அது போன்ற பாதுகாப்பு நிலையை புலிகள் இந்திய பெருங்கடலில் உருவாக்கியிருப்பார்கள்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |