ரயிலை கடத்திய பயங்கரவாதிகள் 16 பேரை கொன்ற பாதுகாப்பு படை! 104 பேர் மீட்பு
பாகிஸ்தானில் பயணிகள் ரயிலை கடத்திய பயங்கரவாதிகளை கொன்று, பாதுகாப்புப் படையினர் 104 பேரை மீட்டுள்ளனர்.
400 பேர்
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் ஜாபர் எக்ஸ்பிரஸ் என்ற ரயிலை பயங்கரவாதிகள் கடத்தினர்.
அதில் பயணித்த சுமார் 400 பேர் அவர்களின் பிடியில் சிக்கினர். பலுச் விடுதலை ராணுவம் என்ற அமைப்பு இதனை செய்ததாக தெரிய வந்தது.
இந்த நிலையில், பாதுகாப்புப் படையினர் அதிரடியாக ரயிலை கடத்திய பயங்கரவாதிகளுடன் சண்டையிட்டுள்ளனர். இதில் 16 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டு, 104 பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
துப்பாக்கிச்சூடு
இதுகுறித்து பலுசிஸ்தான் செய்தித் தொடர்பாளர் ஷாஹித் ரிண்ட் கூறுகையில், "பாதுகாப்புப் படையினர் 58 ஆண்கள் மட்டும் 31 பெண்கள் உட்பட 104 பயணிகளை ஒரு பெட்டியில் இருந்து மீட்டுள்ளனர். ரயிலில் சுமார் 400 பயணிகள் இருந்தனர்.
இதனால் பாதுகாப்புப் படையினர் மற்றும் பயங்கரவாதிகள் இடையே கடுமையான துப்பாக்கிச் சண்டை நடந்தது.
பெஷாவர் செல்லும் பயணிகள் ரயிலில் பயங்கரவாத துப்பாக்கிச்சூடு நடந்ததாக தகவல்கள் வெளியாகி இருக்கும் நிலையில், மீட்புக்குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது" என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |