இந்தியாவில் EV கார்கள் தயாரிக்க Skoda-Volkswagen, Mercedes முனைப்பு - ஆர்வம் காட்டாத Tesla
இந்தியாவில் எலெக்ட்ரிக் கார்களை (EVs) உற்பத்தி செய்யும் நோக்கில் Skoda-Volkswagen மற்றும் Mercedes Benz நிறுவனங்கள் முதலீட்டு திட்டங்களை விரைவில் அறிவிக்கவுள்ளன என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்த நிறுவனங்கள், மத்திய தொழிற்துறை அமைச்சகம் அறிவித்துள்ள Scheme to Promote Manufacturing of Electric Passenger Cars in India (SPMEPCI) திட்டத்தின் கீழ் நன்மைகளை பெற உள்ளன.
மத்திய அமைச்சர் எச்.டி. குமாரசாமி, “Mercedes Benz, Skoda-Volkswagen, Hyundai மற்றும் Kia நிறுவனங்கள் EV உற்பத்திக்கு ஆர்வம் காட்டியுள்ளன. ஆனால் Tesla நிறுவனம் இந்தியாவில் உற்பத்திக்கு எந்தவிதமான ஆர்வமும் காட்டவில்லை,” என்று கூறியுள்ளார்.
இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்ச முதலீடு ரூ.4,150 கோடி செய்ய வேண்டும். அதே நேரத்தில், விண்ணப்பம் அங்கீகரிக்கப்பட்டதிலிருந்து 5 ஆண்டுகளுக்கு 35,000 டொலருக்கு (CIF value) மேற்பட்ட மின்சார வாகனங்களை 15 சதவீத சுங்க வரியுடன் இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்படும்.
விண்ணப்பச் சாளரம் 120 நாட்கள் திறந்திருக்கும், மேலும் தேவைக்கு ஏற்ப இது 2026 மார்ச் 15 வரை நீட்டிக்கப்படும்.
இந்தியா தற்போது மொத்த கார் விற்பனையின் 2.5 சதவீதம் மட்டுமே மின்சார கற்களாக உள்ளன, ஆனால் 2030க்குள் 30 சதவீதமாக உயர்த்துவதே இலக்கு.
டாடா மோட்டார்ஸ், மஹிந்திரா உள்ளிட்ட உள்நாட்டு நிறுவனங்கள் ஏற்கனவே பெரும் முதலீடுகளை EV துறையில் செய்து வருகின்றன, மேலும் சுங்க வரி தளர்வுக்கு எதிராக வலியுறுத்தியுள்ளனர்.

ரூ.3000 கோடி மதிப்பில் பீரங்கி குண்டுகள் ஏற்றுமதி - அனில் அம்பானியின் ரிலையன்ஸ் இன்ஃப்ரா பெரும் முயற்சி
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Skoda EV manufacturing India, Mercedes electric cars India, Tesla India EV rejection, SPMEPCI scheme details, EV production incentives India, Indian government EV policy 2025, Tata Motors EV market share, Hyundai Kia EV India plans, India import duty electric cars, Rs 4150 crore EV investment India