ஸ்லோவாக்கியாவில் ரயிலும்-பஸ்ஸும் மோதி விபத்து: 5 பேர் உயிரிழப்பு
ஸ்லோவாக்கியாவின் தென்பகுதியில் நேற்று நடந்த பயங்கர விபத்தில், ரயிலும் பஸ்ஸும் மோதிக்கொண்டதில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர்.
ஸ்லோவாக்கியாவில் பேரதிர்ச்சி
ஸ்லோவாக்கியாவின் தென்பகுதியில் Nove Zamky என்ற நகரத்திற்கு அருகில் நேற்று மாலை 5 மணிக்கு சற்று பிறகு ரயிலும் பஸ்ஸும் மோதி கொண்டு பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்து தொடர்பாக வெளியான காட்சிகளில், ரயிலின் எஞ்சின் எரிந்தபடி இருப்பதையும், பஸ் கடுமையாக சேதமடைந்திருப்பதையும் பார்க்க முடிகிறது.
இந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்து இருப்பதாகவும் சிலர் காயமடைந்து இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.
காயமடைந்தவர்கள் அருகில் நகரங்களில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்தில் ரயில் பயணிகள் யாரும் உயிரிழக்கவில்லை என்பது தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்து நடந்த போது கிட்டத்தட்ட 100 பயணிகள் ரயிலில் இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |