தற்செயலாக மிதித்த இளைஞர்.., அடுத்த சில நிமிடங்களில் உயிரிழந்த பாம்பு
மனிதனை கடித்த பாம்பு இறந்த சம்பவம் அப்பகுதி மக்களிடம் ஆச்சர்யத்தையும், அதிர்ச்சியையும் அளித்துள்ளது.
பாம்பு உயிரிழப்பு
பாம்பை கண்டால் படையும் நடுங்கும் என்று பழமொழி உண்டு. ஒரு விஷமுள்ள பாம்பு மனிதனை கடித்தால் உயிர் போய்விடும் என்பதால் அனைவரும் அதனை பார்த்து பயப்படுகின்றனர்.
ஆனால், மத்தியப்பிரதேச மாநிலத்தில் உள்ள பாலகாட் மாவட்டத்தில் இளைஞரை கடித்த பாம்பு ஒன்று உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குட்சோடி கிராமத்தில் வசித்து வரும்இளைஞர் சச்சின் நாக்பூரே (25). இவர் தற்செயலாக விஷ பாம்பு ஒன்றை மிதித்துள்ளார். பின்னர், அந்த பாம்பு அவரை உடனே கடித்துள்ளது.
ஆனால், சில நிமிடங்களிலேயே அந்த பாம்பு உயிரிழந்துள்ளது. இதையடுத்து, அந்த இளைஞர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த நிகழ்வை வனத்துறை அதிகாரிகள் அரிதான நிகழ்வு என்று தெரிவித்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |