சட்டவிரோத புலம்பெயர் மக்களை வேட்டையாடும் கறுப்பின தென்னாப்பிரிக்கர்கள்
வானவில் தேசம் என அழைக்கப்பட்ட தென்னாப்பிரிக்காவில் உள்நாட்டுக் கலவரம் பரவி வருவதால், புலம்பெயர்ந்த மக்கள் தற்போது தங்கள் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள தப்பி ஓடுகின்றனர்.
அண்டை வீட்டாரே
இனவெறி ஒழிப்புக்குப் பிந்தைய காலகட்டத்தில் இதுவரை காணப்படாத வகையிலான கொடூரமான சூழலில், கறுப்பின வெளிநாட்டவர்கள் தங்கள் வீடுகளிலிருந்து விரட்டப்பட்டும், தாக்கப்பட்டும், உயிருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டும் வருகின்றனர்.

மூன்று பெரியவர்களில் ஒருவர் வேலையின்றி இருக்கும் ஒரு நாட்டில், வேலையின்மை நெருக்கடியை அதிகரிப்பதாகக் குற்றம் சாட்டப்படும் சட்டவிரோத புலம்பெயர் மக்களுக்கு எதிரான அந்நிய வெறுப்புணர்வு அலையால், அண்டை வீட்டாரே ஒருவருக்கொருவர் எதிராகத் திரும்பியுள்ளனர்.
இந்த வாரத்தில் மட்டும், சுமார் 23,000 பேர்கள், இவர்களில் பெரும்பாலோர் ஜிம்பாப்வே மற்றும் மலாவி நாட்டைச் சேர்ந்தவர்கள், நாடு கடத்தப்படுவதற்கு முன்னதாக, முக்கிய நகரங்களிலிருந்து ஜிம்பாப்வே எல்லைக்கு அருகிலுள்ள ஒரு விவசாய நிலத்தில் அமைக்கப்பட்டிருந்த அவசரக்கால அரசுத் தாயகம் திரும்பும் முகாமிற்குப் பேருந்துகள் மூலம் அழைத்துச் செல்லப்பட்டனர்.
கடந்த மாதம் மார்ச் அண்ட் மார்ச் இயக்கம், கடந்த மாத இறுதிக்குள் அனைத்து ஆவணமற்ற புலம்பெயர்ந்தோரும் தென்னாப்பிரிக்காவை விட்டு வெளியேற வேண்டும் என்று ஒரு இறுதி எச்சரிக்கையை வெளியிட்டபோது அந்த நாட்டை உலுக்கும் மோசமான எழுச்சிகள் தூண்டப்பட்டன.
கடுமையான எல்லைக் கட்டுப்பாடு மற்றும் வெளிநாட்டு தொழிலாளர்களை பெருமளவில் நாடு கடத்தல் ஆகியவற்றைக் கோரும் ஒரு புதிய அழுத்தக் குழுவாகும் இந்த மார்ச் அண்ட் மார்ச் இயக்கம்.
அன்று 120-க்கும் மேற்பட்ட போராட்டங்கள் நடைபெற்றன; 'மபாஹம்பே!' ('அவர்கள் வெளியேற வேண்டும்!') என்று முழக்கமிட்டவாறு போராட்டக்காரர்கள் நகரங்கள் முழுவதும் வலம் வந்தனர்.
இது, நைஜீரியா, கானா, மொசாம்பிக், மலாவி மற்றும் குறிப்பாக ஜிம்பாப்வே உள்ளிட்ட ஆப்பிரிக்க கண்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்து குடியேறியுள்ள லட்சக்கணக்கான மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியது.

போராட்டக்காரர்கள் வெளிநாட்டினரின் வீடுகளையும் வணிக நிறுவனங்களையும் சூறையாடியதன் விளைவாக 600 பேர் கைது செய்யப்பட்டனர்.
தென்னாப்பிரிக்காவின் மிகப்பெரிய நகரமான ஜோகன்னஸ்பர்க்கில், சட்டவிரோதமாகக் குடியேறியவர்களுக்கு அடைக்கலம் கொடுத்திருப்பதாகக் கருதப்பட்ட கடைகள் மற்றும் தனியார் வீடுகளின் ஜன்னல்கள் மீது, தடிகளையும் சுத்தியல்களையும் ஏந்தியிருந்த இளம் தென்னாப்பிரிக்க ஆண்கள் கற்களை வீசினர்.
மார்ச் அண்ட் மார்ச் இயக்கத்தின் நிறுவனர் ஜசிந்தா என்கோபேஸ்-ஜுமா தெரிவிக்கையில், தென்னாப்பிரிக்கர்களுக்குப் பதிலாக வெளிநாட்டினர் நியமிக்கப்பட்டுள்ளதால், வேலையின்மை அதிகரித்து வருகிறது என்றார்.
சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள் அனைவரும் வெளியேற்றப்படும் வரை, ஒவ்வொரு வியாழக்கிழமையும் நாடு முழுவதும் போராட்டங்களை நடத்த உறுதிபூண்டுள்ள, மக்களைத் தூண்டிவிடும் முன்னாள் வானொலி நிகழ்ச்சித் தொகுப்பாளராவார் இந்த ஜசிந்தா என்கோபேஸ்-ஜுமா.
சட்டவிரோதக் குடியேறிகள் பெருமளவில் வெளியேற்றப்பட வேண்டும். இதுவரை வெளியேறாத அனைவரையும் அடுத்த ஆறு மாதங்களுக்குள் அரசாங்கம் வெளியேற்ற வேண்டும் என்று அவர் வலியுறுத்தி வருகிறார்.
ஜிம்பாப்வேயிலிருந்து
இது எளிதான காரியமாக இருக்காது: தென்னாப்பிரிக்காவில் சுமார் 50 லட்சம் ஆவணமற்ற குடியேறிகள் வசிக்கின்றனர்; இது அந்நாட்டின் வயது வந்தோர் மக்கள் தொகையில் 12 சதவீதமாகும்.
பல தசாப்தங்களாக, குறிப்பாக அண்டை நாடான, வறுமையில் வாடும் ஜிம்பாப்வேயுடனான எளிதில் ஊடுருவக்கூடிய எல்லைகளை மூடுவதில் அரசியல்வாதிகள் தோல்வியடைந்துவிட்டதாகக் குற்றம் சாட்டப்படுகிறார்கள்.

இந்த ஜிம்பாப்வேயிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கானோர் வந்து வெற்றிகரமாக வேலை பெறுகின்றனர், அதே நேரத்தில் தென்னாப்பிரிக்கர்கள் வேலையில்லாமல் இருக்கிறார்கள்.
இந்த நிலையில், ஐரோப்பிய இடதுசாரிகளைப் போலவே திறந்த எல்லைகள் மீது மிகுந்த ஆர்வம் கொண்ட தென் ஆப்பிரிக்க இடதுசாரிகளை, இந்த மார்ச் அண்ட் மார்ச் இயக்கத்தின் தாக்குதல் நடவடிக்கை கடும் கோபத்திற்குள்ளாக்கியுள்ளது.
அதன் தலைவர்களில் ஒருவரான சர்ச்சைக்குரிய, தீவிரப் போக்குடைய மார்க்சியவாதி ஜூலியஸ் மலேமா, அனைத்து ஆப்பிரிக்கர்களும் சுதந்திரமாக நடமாட அனுமதிக்கும் எல்லைகளற்ற கண்டம் ஒன்றையும், அத்துடன் ஆப்பிரிக்க நாடுகளுக்கிடையேயான நாடாளுமன்றம், நாணயம் மற்றும் இராணுவம் ஆகியவற்றுக்கான ஒரு சர்ச்சைக்குரிய திட்டத்தையும் முன்வைக்கிறார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |