ஸ்பெயின் தெருக்களில் நிர்வாணமாக நடந்த நபர்: ஆதரவு தெரிவித்த நீதிமன்றம்
தெருக்களில் நிர்வாணமாக நடந்ததற்காக அபராதம் விதிக்கப்பட்ட நபருக்கு ஸ்பெயின் நீதிமன்றம் ஆதரவு தெரிவித்துள்ளது.
நிர்வாண மனிதர்
அலெஜான்ட்ரோ கொலோமர்(29) என்ற நபர் ஸ்பெயினின் வலென்சியா பிராந்தியத்தில் உள்ள Aldaia தெருக்களில் நிர்வாணமாக நடந்ததற்காக கீழ் நீதிமன்றத்தால் அபராதம் விதிக்கப்பட்டு தண்டிக்கப்பட்டார்.
ஸ்பெயினில் பொது நிர்வாணம் என்பது 1988ம் ஆண்டு முதல் விதிமுறைகளுக்கு உட்பட்டது என்று இருக்கும் நிலையில், அலெஜான்ட்ரோ கொலோமர்(Alejandro Colomar) நிர்வாணமாக நடந்ததற்காக அபராதம் விதிக்கப்பட்டதில் எந்த அர்த்தமும் இல்லை என்று தெரிவித்தார்.
இந்நிலையில் Aldaia தெருக்களில் நிர்வாணமாக நடந்த அலெஜான்ட்ரோ கொலோமருக்கு ஸ்பெயின் பிராந்திய நீதிமன்றம் ஆதரவு தெரிவித்துள்ளது.
இது தொடர்பான அறிக்கையில், பிராந்திய தலைநகரின் புறநகரில் உள்ள அல்டாயாவின் தெருக்களில் நிர்வாணமாக இருந்ததற்காக சம்பந்தப்பட்ட நபருக்கு கீழ் நீதிமன்றம் விதித்த ஆண்டு அபராதத்திற்கு எதிரான மேல்முறையீட்டை நிராகரிப்பதாக பிராந்திய உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
அத்துடன் ஸ்பெயினில் பொது நிர்வாணம் தொடர்பான விதிகளில் சட்ட வெற்றிடம் இருப்பதையும் நீதிமன்றம் ஒப்புக் கொண்டது.
அலெஜான்ட்ரோ கொலோமர் நீதிமன்ற தோன்றலின் போது நிர்வாணமாக நுழைய முற்பட்டது குறிப்பிடத்தக்கது.
கொலை மிரட்டல்
ராய்ட்டர்ஸ்-யிடம் கொலோமர் பேசிய போது, 2020 ல் நிர்வாணத்தை தேர்ந்தெடுத்த போது, எதிர்ப்பை விட ஆதரவே அதிகமாக இருந்ததாகவும், இருப்பினும் சில சமயங்களில் கத்தி குத்து கொலை மிரட்டல்கள் வந்து இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த அபராதம் முற்றிலும் அர்த்தமற்றது, அவர்கள் என்னை ஆபாசமான கண்காட்சி என்று குற்றம் சாட்டினார்கள். அகராதியின்படி, பாலியல் நோக்கத்தைக் குறிப்பதற்கும், நான் செய்துகொண்டிருந்ததற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.