தவறான பிரசாரங்களை நம்ப வேண்டாம்: பொதுமக்களுக்கு இலங்கை மத்திய வங்கி கோரிக்கை
பொதுமக்களுக்கு இலங்கை மத்திய வங்கி முக்கிய கோரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் கோரிக்கை
இலங்கை பொதுமக்கள் யாரும் தவறான பிரசாரங்களை நம்பி ஏமாற வேண்டாம் என்று இலங்கை மத்திய வங்கி கோரிக்கை விடுத்துள்ளது.
நாட்டின் பணம் அச்சிடுதல், பணப்புழக்கம் மற்றும் நாணய மாற்று விகிதத்தை தீர்மானித்தல் போன்ற விடயங்கள் குறித்த எச்சரிக்கையை இலங்கை மத்திய வங்கி விடுத்துள்ளது.
இது தொடர்பாக விசேட தொழில்நுட்ப அறிவு இல்லாதவர்கள் சமீபத்திய நாட்களில் வெளியிட்டு வரும் தவறான தகவல்கள் குறித்து இலங்கை பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த விவகாரங்கள் விசேட தொழில்நுட்ப அறிவு மற்றும் புரிதலுடன் பகுப்பாய்வு செய்யப்பட வேண்டியவை என்றும் இலங்கை மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |