கண்டதும் சுட உத்தரவு: இலங்கை அரசு அதிரடி!

Galle Face Protest Gotabaya Rajapaksa Sri Lankan protests Ministry of Defense Sri Lanka
By Ragavan May 10, 2022 04:57 PM GMT
Report

பொதுச் சொத்துக்களுக்குச் சேதம் விளைவிப்பவர்களைக் கண்டால் சுடுவதற்கு இலங்கை அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இலங்கையில் பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடியின் காரணமாக வன்முறை எதிர்ப்புகளுக்கு மத்தியில் பொதுச் சொத்துக்களைச் சூறையாடுபவர்கள் அல்லது மற்றவர்களுக்கு தீங்கு விளைவிப்பவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்துமாறு இராணுவம், விமானப்படை மற்றும் கடற்படை வீரர்களுக்கு இலங்கையின் பாதுகாப்பு அமைச்சு உத்தரவிட்டுள்ளது.

சக குடிமக்களுக்கு எதிரான "வன்முறை மற்றும் பழிவாங்கும் செயல்களை" நிறுத்துமாறு மக்களை வலியுறுத்திய அந்நாட்டு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ , நாடு எதிர்கொள்ளும் அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடியை நிவர்த்தி செய்வதாக உறுதியளித்ததை அடுத்து இந்த உத்தரவு வந்துள்ளது.

கண்டதும் சுட உத்தரவு: இலங்கை அரசு அதிரடி! | Sri Lanka Ordered Shoot At Sight Public Property

இலங்கையின் பாதுகாப்புச் செயலாளர் (ஓய்வு) கமல் குணரத்ன ஆர்ப்பாட்டக்காரர்கள் அமைதியைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் வன்முறையில் ஈடுபட வேண்டாம் என்றும் வலியுறுத்தினார். கொள்ளை மற்றும் பொதுச் சொத்துக்கள் சேதம் தொடர்ந்தால், மீறுபவர்களுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக அமுல்படுத்த பாதுகாப்பு அமைச்சகம் கட்டாயப்படுத்தப்படும் என்று அவர் எச்சரித்தார்.

“வன்முறையில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறு இளைஞர்களையும் பெண்களையும் நான் கேட்டுக்கொள்கிறேன். பொது மற்றும் தனியார் சொத்துக்களுக்கு தீ வைக்க வேண்டாம், ஜனநாயக மற்றும் அமைதியான முறையில் உங்கள் போராட்டத்தில் ஈடுபடுங்கள்,'' என்றார்.

ராஜபக்ச தந்தையின் சிலையை தகர்த்தெறிந்த மக்கள்! வெளியான காணொளி 

கண்டதும் சுட உத்தரவு: இலங்கை அரசு அதிரடி! | Sri Lanka Ordered Shoot At Sight Public Property

அமைதியான போராட்டங்கள் என்ற போர்வையில் கொள்ளையர்கள் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி குற்றச்செயல்களில் ஈடுபட்டுள்ளதாக எச்சரித்த பாதுகாப்பு செயலாளர், இது மிகவும் துரதிஷ்டவசமான நிலை எனவும் தெரிவித்தார்.

முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச மற்றும் அவரது குடும்பத்தினர் தஞ்சம் அடைந்துள்ளதாக கூறப்படும் திருகோணமலை கடற்படை முகாமிற்கு வெளியே அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில், பாதுகாப்பு செயலாளர் கடுமையான எச்சரிக்கை விடுதிட்டுள்ளார்.

இலங்கையில் வெடித்த வன்முறை: ரத்கம பகுதியில் துப்பாக்கி சூடு 

கண்டதும் சுட உத்தரவு: இலங்கை அரசு அதிரடி! | Sri Lanka Ordered Shoot At Sight Public Property

அமைதியான நடத்தை குறித்து இளைஞர்களுக்கு ஆலோசனை வழங்குமாறும் குணரத்ன மதத் தலைவர்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.

இதற்கிடையில், திங்கட்கிழமை அன்று அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது அப்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் ஆதரவாளர்கள் தாக்கியதைத் தொடர்ந்து வெடித்த வன்முறையில் இறந்தவர்களின் எண்ணிக்கை 8-ஆக உயர்ந்தது.

நிறுத்துங்கள்... இலங்கை அதிபர் கோட்டபய ராஜபக்ச வெளியிட்ட பதிவு 

கண்டதும் சுட உத்தரவு: இலங்கை அரசு அதிரடி! | Sri Lanka Ordered Shoot At Sight Public Property

76 வயதான மகிந்த ராஜபக்ச பிரதமர் பதவியை ராஜினாமா செய்த போதிலும் அமைதியை ஏற்படுத்த முடியவில்லை. மகிந்த ராஜபக்சவின் இளைய சகோதரரான ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை ராஜினாமா செய்யுமாறு அரசாங்கத்திற்கு எதிரான போராட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கொழும்பு மற்றும் நாட்டின் மற்ற பகுதிகளில் இடம்பெற்ற வன்முறைகளில் 250 பேர் காயமடைந்துள்ளனர். 

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நீர்வேலி வடக்கு, இணுவில், Glarus, Switzerland

19 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

24 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு வேலணை, Ottawa, Canada, Montreal, Canada

18 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

15 Apr, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

12 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு 13

11 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொக்குவில் மேற்கு, சென்னை, India, வெள்ளவத்தை

15 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Pierrefitte-sur-Seine, France

18 Apr, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கலிஃபோர்னியா, United States

16 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வட்டகச்சி, Mississauga, Canada

17 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, இருபாலை, Bois-Herpin, France

18 Mar, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், Toronto, Canada

14 Apr, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், திருவையாறு

15 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கிளிநொச்சி, Brampton, Canada

16 Apr, 2024
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Coventry, United Kingdom

17 Apr, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, Cambridge, United Kingdom, கொலம்பஸ், United States

17 Apr, 2019
மரண அறிவித்தல்

வயாவிளான், Toronto, Canada

15 Apr, 2026
மரண அறிவித்தல்

நட்டாங்கண்டல்

14 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

10 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு இறுப்பிட்டி, Scarborough, Canada

11 Apr, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
மரண அறிவித்தல்

கோப்பாய் வடக்கு, கனடா, Canada

12 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பிரான்ஸ், France

15 Apr, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, Scarborough, Canada

09 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

களுதாவளை, சாவகச்சேரி, மட்டக்களப்பு, London, United Kingdom

14 Apr, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US