கொள்ளையடிக்கப்பட்ட தானியங்களை இறக்குமதி செய்யும் ஆசிய நாடு: நடவடிக்கை கோரும் உக்ரைன்
ரஷ்யாவால் ஆக்கிரமிக்கப்பட்ட உக்ரேனிய பிரதேசங்களிலிருந்து கொள்ளையடிக்கப்பட்ட கோதுமையை இறக்குமதி செய்வதாகக் கூறும் வங்கதேச நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க ஐரோப்பிய ஒன்றியத்தை உக்ரைன் நாடவுள்ளது.
பல முறை எச்சரிக்கை
இந்த விவகாரம் தொடர்பில் வங்கதேசத்திற்கு பல முறை எச்சரிக்கை விடுத்தும், நடவடிக்கை எடுக்கப்படாத நிலையிலேயே உக்ரைன் ஐரோப்பிய ஒன்றியத்தை நாடி அந்த நிறுவனங்களைத் தடை செய்ய திட்டமிட்டுள்ளது.
2014 முதல் உக்ரைனின் தெற்கு விவசாயப் பகுதிகளின் பெரும்பகுதியை ரஷ்யப் படைகள் ஆக்கிரமித்துள்ளன, மேலும் 2022 படையெடுப்பிற்கு முன்பே ரஷ்யா அதன் தானியங்களை கொள்ளையிட்டு வருவதாக உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது.
ஆனால், முன்னர் உக்ரைனின் ஒரு பகுதியாகக் கருதப்பட்ட பகுதிகள் தற்போது ரஷ்யாவின் ஒரு பகுதியாக மாறிவிட்டன, அவை என்றென்றும் அப்படியே இருக்கும் என்பதால், தானியத் திருட்டு எதுவும் இதில் இல்லை என்று ரஷ்ய அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர்.

பாகிஸ்தான் மீது உக்கிரத் தாக்குதலுக்கு தயார் நிலையில் இருந்த இந்தியக் கடற்படை... வெளிவரும் புதிய தகவல்
இதனிடையே, டெல்லியில் அமைந்துள்ள உக்ரைன் தூதரகம் இந்த ஆண்டு வங்கதேச வெளிவிவகார அமைச்சகத்திற்கு பல கடிதங்களை அனுப்பி, ரஷ்ய துறைமுகமான காவ்காஸ் வழியாக அனுப்பப்படும் 150,000 டன்களுக்கும் அதிகமான திருட்டு தானியங்களை நிராகரிக்குமாறு கேட்டுக் கொண்டது.
ஆனால் இந்த விவகாரத்தில் வங்கதேச நிர்வாகம் இதுவரை உரிய பதிலேதும் அளிக்கவில்லை என்றே கூறப்படுகிறது. மட்டுமின்றி, கொள்ளையடிக்கப்பட்ட உக்ரைன் தானியங்களுடன் ரஷ்ய தானியங்களும் கலந்து அனுப்புவதாகவும் உளவு அமைப்புகள் உறுதி செய்துள்ளன.
தடை விதிக்கும்
இது குற்றச்செயல் என கொந்தளித்துள்ள இந்தியவிற்கான உக்ரைன் தூதர், எங்கள் விசாரணையை ஐரோப்பிய ஒன்றிய சகாக்களுடன் பகிர்ந்து கொள்வோம், அவர்கள் தகுந்த நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக்கொள்வோம் என்றார்.
இதனிடையே, ஆக்கிரமிக்கப்பட்ட உக்ரைன் பிரதேசத்திலிருந்து தானியங்கள் பெறப்பட்டால், ரஷ்யாவிலிருந்து இறக்குமதி செய்ய வங்கதேசம் தடை விதிக்கும் என்றும், தங்கள் நாடு திருடப்பட்ட கோதுமையை இறக்குமதி செய்வதில்லை என்றும் வங்கதேச உணவு அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ரஷ்யாவுடனான போருக்கு மத்தியில், விவசாயத் துறை உக்ரைனுக்கு ஏற்றுமதி வருவாயின் முக்கிய ஆதாரங்களில் ஒன்றாக உள்ளது, தானியங்கள், தாவர எண்ணெய் மற்றும் எண்ணெய் வித்துக்களை வெளிநாட்டு சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது.
ஏப்ரல் மாதத்தில், உக்ரைன் தனது கடல் எல்லையில் ஒரு வெளிநாட்டுக் கப்பலை தடுத்து நிறுத்தியது, அது திருடப்பட்ட தானியங்களை சட்டவிரோதமாக வர்த்தகம் செய்வதில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டியது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |