ஈரானுடனான ட்ரம்பின் மோதல் போக்கு... மேலும் ஒரு உயர் மட்ட இராணுவ அதிகாரி ராஜினாமா
ஹார்முஸ் நீரிணையை மையமாகக் கொண்டு, ஈரானுடன் டொனால்ட் ட்ராம்ப் நடத்தி வரும் தொடர் மோதல்களுக்கு மத்தியில், அமெரிக்கக் கடற்படைச் செயலாளர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
அமெரிக்கக் கடற்படை
முக்கியத்துவம் வாய்ந்த வர்த்தக நீர்வழிப் பாதை தொடர்பாக ஈரானுடன் ட்ரம்ப் நடத்தி வரும் மோதல் தொடர்ந்து வரும் நிலையில், ஜான் சி. ஃபெலன் புதன்கிழமை பிற்பகல் தனது உயர்மட்ட இராணுவப் பதவியிலிருந்து விலகினார்.

வெறும் இரண்டு நாட்களுக்கு முன்புதான், ட்ரம்ப்பின் முற்றுகையை மீறிச் செல்ல முயன்ற ஒரு ஈரானிய சரக்குக் கப்பலை, அந்த நீரிணையில் அமெரிக்கக் கடற்படை தாக்கிப் கைப்பற்றியது.
ஈரான் மீதான அழுத்தத்தை வலுப்படுத்தவும், எண்ணெய் ஏற்றுமதி மூலம் அந்நாடு லாபம் ஈட்டும் திறனைக் கட்டுப்படுத்தவும், சமீப நாட்களாக ஹார்முஸ் நீரிணையில் ட்ரம்ப் மற்றும் கடற்படையின் பிரசன்னம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஹார்முஸ் நீரிணை ஊடாக வழக்கமாக 3,000-க்கும் மேற்பட்ட கப்பல்கள் செல்வதுண்டு. ஆனால் இஸ்ரேல் காரணமாக தற்போது நடைபெற்று வரும் அமெரிக்க-ஈரான் மோதலின் போது, இந்த எண்ணிக்கை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளதுடன், ஒரு நாளைக்கு ஒரு சில எனக் குறைந்துள்ளது.
அமெரிக்க ஜனாதிபதிக்கு மிக முக்கியமான ஒரு கட்டத்தில், ட்ரம்ப் நிர்வாகத்தை வாட்டிவரும் தொடர் ராஜினாமாக்களின் வரிசையில், கடற்படையின் தலைமைப் பொறுப்பிலிருந்து ஃபெலன் விலகியிருப்பது மிகச் சமீபத்திய நெருக்கடியாகும்.
பிரதிநிதிகள் தோல்வி
ஏப்ரல் 17 முதல், ஓமன் வளைகுடா மற்றும் அரபிக்கடல் உள்ளிட்ட ஈரானியத் துறைமுகங்கள் அல்லது ஈரானியக் கடற்கரையிலிருந்து வெளியேறவோ அல்லது உள்ளே நுழையவோ முயன்ற அனைத்துக் கப்பல்களையும் அமெரிக்கக் கடற்படை முற்றுகையிடத் தொடங்கியது.

ஏப்ரல் 12 அன்று ஈரானுடன் அமைதி ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்துவதில் அமெரிக்கப் பிரதிநிதிகள் தோல்வியடைந்ததாலும், ஜே.டி. வேன்ஸ் இஸ்லாமாபாத்திலிருந்து தோல்வியுடன் திரும்பியதாலும் இந்த முற்றுகை தொடங்கியது.
இந்த நிலையில், ஈரானிய துறைமுகங்கள் மீதான அமெரிக்க முற்றுகை நீடிக்கும் வரை, ஹார்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் கப்பல்களைக் கட்டுப்படுத்துவோம் என ஈரான் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |