நோர்ட் ஸ்ட்ரீம் குற்றச்சாட்டுகள் முட்டாள்தனமானது மற்றும் அபத்தமானது: ரஷ்யா விளக்கம்
நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாயில் ஏற்பட்ட மர்மமான கசிவு.
ரஷ்யா மீதான குற்றச்சாட்டு அபத்தமானது மற்றும் முட்டாள்தனமானது என விளக்கம்.
நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய்களில் ஏற்பட்ட எரிவாயு கசிவுக்கு ரஷ்யாவை குற்றம் சாட்டுவது முட்டாள்தனமானது மற்றும் அபத்தமானது என அந்த நாட்டின் செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் பதிலளித்துள்ளார்.
டென்மார்க்கிற்கு அருகிலுள்ள நோர்ட் ஸ்ட்ரீம் (Nord Stream) 1 மற்றும் நோர்ட் ஸ்ட்ரீம் 2-ல் இருந்து மர்மமான மூன்று கசிவுகள் நீருக்கடியில் ஏற்பட்டதை தொடர்ந்து அந்த பகுதியில் சக்திவாய்ந்த வெடிப்பு பதிவு செய்யப்பட்டது.
#German special services believe that the lines of #NordStream2 and #Nordstream1 damaged by explosions may be out of service forever - Tagesspiegel.
— NEXTA (@nexta_tv) September 28, 2022
Meanwhile, the Swedish Coast Guard publishes new footage of the #NordstreamLeaks. pic.twitter.com/98DBfQopzA
Nord Stream குழாயில் ஏற்பட்ட கசிவுக்கு மர்மமான முறையில் நடத்தப்பட்ட தாக்குதலே காரணம் என ஜேர்மனி அறிவித்தது. இதனைத் தொடர்ந்து ஐரோப்பாவும் Nord Stream குழாயில் ஏற்பட்ட கசிவினை திட்டமிட்ட செயல் என ரஷ்யாவை குற்றம் சாட்டியது.
இந்நிலையில் ஐரோப்பிய நாடுகளின் குற்றச்சாட்டு முட்டாள்தனமானது மற்றும் அபத்தமானது என ரஷ்யாவின் செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் பதிலளித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்த தகவலில், இத்தகைய தருணங்களில் இதுபோன்ற குற்றச்சாட்டுகள் கணிக்க கூடியது மற்றும் பொறுப்பற்றது என தெரிவித்தார்.
அத்துடன் எரிவாயு குழாயில் ஏற்பட்ட கசிவு வெடிப்பு, ரஷ்யாவிற்கும் மிகப்பெரிய பிரச்சினைக்குரிய விஷயம் தான் என தெரிவித்தார்.
மேலும் குழாயின் இரு கிளைகளும் எரிவாயுவினால் நிரப்பப்பட்டுள்ளன, இந்த எரிவாயுவின் விலை மிகவும் உயர்வானது மற்றும் அவை தற்போது காற்றில் கரைந்து வருகின்றன எனத் தெரிவித்தார்.
இந்த இக்கட்டான சூழ்நிலையில் எந்தவொரு அறிக்கையையும் வெளியிடுவதற்கு முன்பு விசாரணையின் முடிவுகளுக்காக காத்திருக்குமாறு அனைவரையும் அவர் கேட்டுக்கொண்டார்.
கூடுதல் செய்திகளுக்கு; அமெரிக்க துணை ஜனாதிபதியின் தென் கொரிய சுற்றுப்பயணம்: பாலிஸ்டிக் ஏவுகணை ஏவியது வட கொரியா
இது என்ன நடந்தது என்பதைக் கண்டறிய அனைத்து தரப்பிலிருந்தும் உரையாடல், உடனடி தொடர்பு தேவைப்படும் சூழ்நிலை இது. இதுவரை அத்தகைய உரையாடலின் முழுமையான பற்றாக்குறையை நாங்கள் காண்கிறோம் என Dmitry Peskov தெரிவித்துள்ளார்.