பூமிக்கு திரும்பிய சுனிதா வில்லியம்ஸ்: அடுத்த 48 நாட்கள் என்ன நடக்கும்? டால்பின்களின் வரவேற்பு வீடியோ
நாசா விண்வெளி வீரர்கள் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோரை டால்பின்கள் வரவேற்ற காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.
பூமிக்கு திரும்பிய சுனிதா வில்லியம்ஸ்
சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) நீண்ட காலம் தங்கியிருந்ததை முடித்துக்கொண்டு நாசா விண்வெளி வீரர்கள் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் பூமிக்கு பத்திரமாக திரும்பியுள்ளனர்.
சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் பயணித்த ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் ஃப்ரீடம் விண்கலம் இன்று காலை இந்திய நேரப்படி 3:27 மணிக்கு புளோரிடாவின் டல்லாஹஸ்ஸி கடற்கரையில் தரையிறங்கியது.
தரையிறங்கியதைத் தொடர்ந்து, விண்வெளி வீரர்கள் ஒரு சிறப்பு கப்பல் மூலம் விரைவாக மீட்கப்பட்டனர்.
மீட்புப் பணியாளர்களின் உதவியுடன், வில்லியம்ஸ் மற்றும் வில்மோர் ஆகியோர் திடமான தரையில் தங்கள் முதல் அடிகளை எடுத்து வைத்தனர்.
இப்போது அவர்கள் டெக்சாஸின் ஹூஸ்டனுக்கு கொண்டு அழைத்து செல்லப்படுவார்கள். அங்கு, அவர்கள் பூமியின் ஈர்ப்பு விசைக்கு மீண்டும் பழகவும், அவர்களின் நீண்ட விண்வெளிப் பயணத்தின் விளைவுகளிலிருந்து மீளவும் விரிவான 45 நாள் மறுவாழ்வு திட்டத்திற்கு உட்படுத்தப்படுவார்கள்.
விண்வெளி வீரர்களை வரவேற்ற டால்பின்கள்
சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் பயணித்த ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் ஃப்ரீடம் விண்கலம் தரையிறங்கிய போது, விண்கலத்தை சுற்றி அட்லாண்டிக் பெருங்கடலின் பாலூட்டிகளான டால்பின்கள் துள்ளிக் குதித்து விளையாடும் காட்சிகள் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
A pod of Dolphins stopped by to say welcome home to the Astronauts! 🐬 pic.twitter.com/0XXdMJbKG8
— DogeDesigner (@cb_doge) March 18, 2025
இந்த அற்புதமான தருணம், நாசாவின் நேரடி ஒளிபரப்பின் போது பதிவு செய்யப்பட்டது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |