கோர ஹெலிகொப்டர் விபத்தில் அதிசயமாக தப்பிய விமானி: நினைவுகூர்ந்த திகில் தருணம்
ஹவாய் தீவின் அருகே ஹெலிகொப்டர் விபத்தில் உயிர்தப்பிய விமானி, திகிலூட்டும் தருணங்களை நினைவுகூர்ந்துள்ளார்.
ஹெலிகொப்டர் விபத்து
கடந்த மாதம் ஹவாய் தீவின் Kauai அருகே ஹெலிகொப்டர் ஒன்று விபத்திற்குள்ளானது. அதில் மூன்று பயணிகள் உயிரிழக்க, விமானி மட்டும் அதிசயமாக உயிர்தப்பினார்.
தற்போது அவர் கூட்டாட்சி புலனாய்வாளர்களிடம், ஹெலிகொப்டர் பேரழிவிற்கு சில வினாடிகளுக்கு முன்பு நடந்த திகிலூட்டும் தருணங்களை நினைவு கூர்ந்துள்ளார்.
தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியத்தின் பூர்வாங்க அறிக்கையின்படி, 'மார்ச் 26 அன்று மதியம் கலலாவ் கடற்கரையை அடைந்தபோது, ஹெலிகொப்டர் முழுவதும் அலை அலையாக வந்து ஒவ்வொரு முறையும் வலுப்பெற்ற ஒரு உயர் அதிர்வெண் அதிர்வை உணர்ந்தேன்.
பின்னர் ஹெலிகொப்டர் கட்டளையின்றி வலதுபுறம் திரும்பியது. அது பின் இரண்டு முழுமையாக கடிகார சுழற்சிகளாக அதிகரித்தது' என விமானி கூறியிருக்கிறார்.
காற்றின் விசையால்
மேலும் அந்த அறிக்கையில், Autorotation என்ற ஒரு தந்திரத்தைப் பயன்படுத்தி ஹெலிகொப்டர் சுழல்வதை விமானி நிறுத்தினார்.

இந்தத் தந்திரம், இயந்திரத்தின் சக்தியால் சுழலுவதற்கு பதிலாக, காற்றின் விசையால் சுழலியை சுழல செய்கிறது.
அவசர உதவி அழைப்பு விடுத்த சிறிது நேரத்திலேயே, ஹெலிகொப்டர் கடற்கரையில் இருந்து சுமார் 75 yards தொலைவில் தண்ணீரில் மோதி, அதன் வலது பக்கமாகக் கவிழ்ந்து, பகுதியளவு நீரில் மூழ்கியதாக கூறப்பட்டுள்ளது.
ஆனால், மொத்தம் ஐந்து பேர் பயணித்ததில் விமானி மற்றும் பயணி ஒருவர் மட்டுமே தப்பினர்.
உயிர் பிழைத்த பயணி
அவர்கள் எப்படி உயிர்தப்பினர் என்பதையோ அல்லது உயிர் பிழைத்த பயணி எங்கே அமர்ந்திருந்தார் என்பதையோ அந்த அறிக்கை விளக்கவில்லை. இருவரும் பலத்த காயமடைந்தனர்.
NTSB விசாரணைகள் பொதுவாக இறுதி அறிக்கை வெளியிடப்படுவதற்கு ஒன்று முதல் இரண்டு ஆண்டுகள் வரை ஆகும். பூர்வாங்க அறிக்கை என்பது சம்பவ இடத்தில் சேகரிக்கப்பட்ட ஆரம்ப உண்மைகளின் தொகுப்பு மட்டுமே ஆகும்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |