ரஷ்யாவில் வழிபாட்டுத் தலங்களில் பயங்கரவாத தாக்குதல்., 15 பேர் பலி
ரஷ்யாவில் பயங்கரவாதிகள் அட்டூழியத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வழிபாட்டுத் தலங்கள், தேவாலயங்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் மீது குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை தாகெஸ்தானில் (Dagestan) ஆயுதமேந்திய தாக்குதல் நடத்தியவர்கள் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 15 பொலிஸ் அதிகாரிகள், பொதுமக்கள் மற்றும் ஒரு தேவாலயத் தந்தை கொல்லப்பட்டதாக மாநில ஆளுநர் செர்ஜி மிலிகோவ் (Sergei Melikov) ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
இந்த சம்பவத்தில் குறைந்தது 20 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தாகெஸ்தானின் தலைநகரான மகச்சிகலா மற்றும் டெர்பென்ட் ஆகிய இடங்களில் உள்ள தேவாலயங்கள் மற்றும் காவல் நிலையங்கள் மீது கும்பலொன்று ஒரே நேரத்தில் தாக்குதல் நடத்தியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த தாக்குதலை பயங்கரவாதிகளின் செயல் என ரஷ்ய பயங்கரவாத எதிர்ப்பு குழு கூறியுள்ளது.
உடனடியாக உஷார்படுத்தப்பட்ட பாதுகாப்புப் படையினர், பயங்கரவாதிகளை முறியடிக்க சிறப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதில் 6 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |