சர்வதேச நாடுகளின் ஆதரவு வேண்டும்...தைவான் ஜனாதிபதி வேண்டுகோள்!
தைவானில் அதிகரித்து வரும் பிராந்திய பதற்றத்தை தடுக்க சர்வதேச சமூகத்தின் ஆதரவை அந்த நாட்டின் ஜனாதிபதி சாய் இங்- வென் கோரியுள்ளார்.
அமெரிக்க நாடாளுமன்றத்தின் சபாநாயகர் நான்சி பெலோசியின் தைவான் சுற்றுப்பயணத்தை தொடர்ந்து, தைவானுக்கும் சீனாவிற்கும் இடையிலான பிராந்திய பதற்றம் பல மடங்கு அதிகரித்துள்ளது.
இந்தநிலையில் தைவான் ஜலசந்தியைச் சுற்றி பல சீன போர் விமானங்கள் மற்றும் போர் கப்பல்கள் தைவானின் இடைநிலைக் கோட்டைத் தாண்டியதாக சனிக்கிழமை அந்த நாட்டின் பாதுகாப்பு அமைச்சகம் குற்றம்சாட்டியுள்ளது.
AFP
இதனைத் தொடர்ந்து, தைவான் ஜனாதிபதி சாய் இங்-வென் சனிக்கிழமை பதிவிட்ட ட்வீட்டில், நாட்டின் நிலைமையை அரசாங்கமும், இராணுவமும் சீனாவின் இராணுவப் பயிற்சிகள் தகவல் போர் நடவடிக்கைகளை உன்னிப்பாக கண்காணித்து வருவதாக தெரிவித்துள்ளார்.
கூடுதல் செய்திகளுக்கு: மனிதர்கள் பயணிக்கும் முதல் டிரோன்...இந்தியாவில் விரைவில் அறிமுகம்!
அத்துடன், சர்வதேச நாடுகள் ஜனநாயக தைவானை ஆதரிக்கவும், பிராந்திய பாதுகாப்பு நிலைமையில் அதிகரித்து வரும் பதற்றத்தை தடுக்கவும் சர்வதேச சமூகத்தை நான் கேட்டுக் கொள்கிறேன் என தைவான் ஜனாதிபதி சாய் இங் வென் தெரிவித்துள்ளார்.
Getty Images