1,00,000 இந்திய தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தவுள்ள தெற்காசிய தீவு நாடு!
தொழிலாளர் ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக 1,00,000 இந்திய தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்த தெற்காசிய தீவு நாடான தைவான் தயாராக உள்ளது.
1 லட்சம் இந்தியர்கள்
அடுத்த மாதத்திற்குள் தொழிற்சாலைகள், பண்ணைகள் மற்றும் மருத்துவமனைகள் உட்பட பல்வேறு துறைகளில் குறைந்தது 100,000 இந்திய தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்த தைவான் திட்டமிட்டுள்ளதாக ப்ளூம்பெர்க் தெரிவித்துள்ளது.
டிசம்பரில் இரு நாடுகளும் (இந்தியா-தைவான்) தொழிலாளர் இயக்கம் ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் என்றும் ப்ளூம்பெர்க் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதியோர் சனத்தொகை அதிகரிப்பு
வளர்ந்து வரும் முதியோர் சனத்தொகையுடன் தைவான் போராடி வரும் நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 2025-ஆம் ஆண்டில், தைவானும் ஒரு 'Super-Aged' சமூகமாக மாறும் என்று கணிக்கப்பட்டுள்ளது, அங்கு முதியவர்கள் மக்கள் தொகையில் ஐந்தில் ஒரு பங்கிற்கு மேல் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த புதிய தொழிலாளர் ஒப்பந்தம் சீனாவுடனான புவிசார் அரசியல் பதட்டங்களை அதிகரிக்கும் என்றும் அறிக்கை தெரிவிக்கிறது.
தொழிலாளர்களை வழங்கக்கூடிய நாடுகளுடன் ஒத்துழைக்க தயாராக இருப்பதாக தைவானின் தொழிலாளர் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
உள்ளூர் மக்களுக்கு சமமான ஊதியம்., குடும்பங்களை அழைத்து வர அனுமதி..
வேலையின்மை விகிதம் 2000-ஆம் ஆண்டிலிருந்து மிகக் குறைந்த அளவிற்கு வீழ்ச்சியடைந்துள்ள தைவான், அதன் 790 பில்லியன் டொலர் பொருளாதாரத்தை மேம்படுத்த, உள்ளூர் மக்களுக்கு சமமான ஊதியத்தையும் இந்திய தொழிலாளர்களுக்கு காப்பீட்டுக் கொள்கைகளையும் வழங்குகிறது.
இந்தியா வளர்ந்த நாடுகளுடன் தொழிலாளர் ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் நேரத்தில் இது வந்துள்ளது. வேலைவாய்ப்பு இயக்கம் ஒப்பந்தத்தின் கீழ், இந்தியத் தொழிலாளர்கள் மூன்று ஆண்டுகள் வரை தைவானில் தங்கி தங்கள் குடும்பங்களைத் தங்களுடன் அழைத்து வர அனுமதிக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
India-Taiwan Relation, Taiwan plans to hire 1 lakh Indian workers, 1,00,000 இந்திய தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தவுள்ள தெற்காசிய தீவு நாடு, தைவான்