இந்தியா தாக்கிய அதே பாகிஸ்தான் விமானத் தளத்தை மீண்டும் தாக்கிய தாலிபான்
இந்தியா தாக்கிய அதே பாகிஸ்தான் விமானத் தளத்தை இப்போது தாலிபான் தாக்கியுள்ளது.
பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லைப் பிரச்சினை தீவிரமடைந்துள்ள நிலையில், ஆப்கான் தாலிபான் படைகள் பாகிஸ்தானின் முக்கிய இராணுவ தளங்களை குறிவைத்து ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளன.
ராவல்பிண்டியில் உள்ள நூர் கான் விமானத் தளம், இந்தியா நடத்திய 'ஆபரேஷன் சிந்தூர்' தாக்குதலுக்குப் பிறகு பழுது பார்க்கப்பட்டு கொண்டிருந்த நிலையில், இப்போது மீண்டும் தாலிபானின் தாக்குதலுக்கு இலக்கானது.
ஆப்கான் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட தகவலின்படி, தாலிபான் படைகள் நூர் கான் விமானத் தளம், குவெட்டாவில் உள்ள 12-வது படைப்பிரிவின் தலைமையகம், கெய்பர் பக்துன்க்வாவில் உள்ள முகாம்கள் உள்ளிட்ட பல முக்கிய இராணுவ தளங்களை குறிவைத்து ஒருங்கிணைந்த ட்ரோன் தாக்குதலை நடத்தியுள்ளனர்.

மேலும், ஜலாலாபாத் நகரில் பாகிஸ்தான் விமானப்படை ஜெட் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும், அதில் இருந்த பைலட் உயிருடன் பிடிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கு பதிலடி நடவடிக்கையாக, பாகிஸ்தான் காபூல் மற்றும் கந்தஹார் நகரங்களில் விமானத் தாக்குதல் நடத்தியது. இதில் 133 தாலிபான் போராளிகள் உயிரிழந்ததாகவும், 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.
இந்த தொடர் தாக்குதல்களால், பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் “நாம் ஆப்கானிஸ்தானுடன் வெளிப்படையான போரில் உள்ளோம்” என்று அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Taliban drone attack Pakistan, Nur Khan Airbase strike, Pakistan Afghanistan conflict 2026, Taliban vs Pakistan military bases, Rawalpindi Nur Khan base news, Pakistan airstrikes Kabul Kandahar, Cross-border war Taliban Pakistan #TalibanAttack #PakistanConflict #NurKhanBase #AfghanWar #DroneStrike #CrossBorderTensions #WorldNews