நான் 100 பிள்ளைகளுக்கு அப்பா! 13.9 பில்லியன் சொத்துக்களும் இவர்களுக்கு மட்டும்தான் - ரஷ்ய கோடீஸ்வரர்
டெலிகிராம் நிறுவனரான பாவெல் துரோவ், தனது பிள்ளைகளுக்காக இப்போதே உயில் எழுதி வைத்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.
விந்தணு தானம்
ரஷ்யாவைச் சேர்ந்த பாவெல் துரோவ் உலக கோடீஸ்வரர்களில் ஒருவர் ஆவார். டெலிகிராம் சமூக தளத்தின் நிறுவனரான இவர், சமீபத்தில் ஊடகத்திற்கு அளித்த நேர்காணலில் தனது சொத்துக்கள் குறித்து பேசியுள்ளார்.
மேலும், 15 ஆண்டுகளுக்கு முன்பு தனது நண்பருக்கு உதவுவதற்காக துரோவ் விந்தணு தானம் செய்ய மருத்துவமனையை தொடங்கியுள்ளார்.
அதன் மூலம் சுமார் 12 நாடுகளில் 100க்கும் மேற்பட்ட குழந்தைகள் பிறந்துள்ளதால், தான் 100 பிள்ளைகளுக்கு அப்பா என்று கூறியுள்ளார்.
30 வயதிற்கு மேல்
எனினும், தனக்கு அதிகாரப்பூர்வமாக 6 பிள்ளைகள் உள்ளதை அவர் குறிப்பிட்டுள்ளார். துரோவிற்கு வெவ்வேறு துணைகள் மூலம் 6 பிள்ளைகள் உள்ளன. அவர்களுக்கு தனது மொத்த சொத்தான 13.9 பில்லியன் டொலர்களை பிரித்துக்கொடுக்க இப்போதே உயில் எழுதி வைத்துவிட்டாராம்.
ஆனாலும், அவர்களின் 30 வயதிற்கு மேல்தான் சமமாக பிரித்து கொடுப்பேன் என்றும், அதுவரை அவர்கள் சராசரி மனிதர்களைப் போல்தான் வாழ வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் தனது பிள்ளைகள் தங்களை தாங்களே கட்டமைத்து, நம்பிக்கையை ஏற்படுத்தி வாழ வேண்டும். மாறாக, அவர்கள் வங்கிக் கணக்கை நம்பி வாழக்கூடாது என்று குறிப்பிட்டள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |