மக்கள் கூட்டத்துக்குள் பாய்ந்த புலி: சர்க்கஸ் பார்க்கச் சென்றவர்கள் சந்தித்த திகில் அனுபவம்
ரஷ்யாவில், சர்க்கஸ் பார்த்துக்கொண்டிருந்த மக்கள், திடீரென புலி ஒன்று மக்கள் கூட்டத்துக்குள் புகுந்ததால் திகிலில் உறைந்த சம்பவம் ஒன்று நடைபெற்றது.
மக்கள் கூட்டத்துக்குள் பாய்ந்த புலி
ரஷ்யாவிலுள்ள Rostov-on-Don என்னும் நகரில் சர்க்கஸ் ஒன்று நடைபெற்றுக்கொண்டிருந்தது. மூன்று புலிகளை நாற்காலிகளில் அமரவைத்து அவற்றிற்கு உத்தரவு கொடுத்துக்கொண்டிருந்தார் சர்க்கஸ் ஊழியர் ஒருவர்.

அப்போது திடீரென விலங்குகளைச் சுற்றி மேடையில் பாதுகாப்புக்காக அமைக்கப்பட்டிருந்த வலை கீழே சரிந்துள்ளது.
சில விநாடிகளுக்குள் சர்க்கஸ் ஊழியர்கள் அந்த வலையை பழைய நிலைக்குக் கொண்டுவந்துவிட்டார்கள்.

ஆனால், கிடைத்த சில விநாடிகளைப் பயன்படுத்திக்கொண்ட புலி ஒன்று மேடையிலிருந்து கீழே விழுந்த வலையைத் தாண்டி மக்கள் கூட்டத்துக்குள் குதித்துவிட்டது.
மக்கள் திகிலில் உறைய, அறிவிப்பாளர்களும், மக்கள் ஓட முயற்சிக்கவேண்டாம், மக்கள் ஓடினால் புலியும் மிரளும் என அறிவிப்பு கொடுக்க, அதற்குள் சர்க்கஸ் ஊழியர் ஒருவர் புலியை சர்க்கஸ் கூடாரத்துக்கு வெளியே கொண்டு சென்றுவிட்டார்.

ஆனால், புலி அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது. பின்னர், அது தெருஒன்றில் நடமாடுவது தெரியவரவே, அது பத்திரமாக மீண்டும் அதன் கூண்டில் அடைக்கப்பட்டுவிட்டது.
நல்லவேளையாக புலியால் யாருக்கும் எந்த சேதமும் ஏற்படவில்லை என உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |