விபத்துக்குள்ளான இந்தோனேசியா விமானத்தில் ஏறியவுடன் தாய் தனது குழந்தைகளுடன் பதிவிட்ட கடைசி போஸ்ட்! நெஞ்சை உருக்கும் புகைப்படம்
விபத்துக்குள்ளான இந்தோனேசிய விமானத்தில் ஏறியவுடன் பெண் ஒருவர் தனது குழந்தைகளுடன் பதிவிட்ட கடைசி போஸ்ட் காண்போரை கலங்க வைத்துள்ளது.
Jakarta-விலிருந்து 50-க்கும் மேற்பட்டவர்களுடன் Pontianak புறப்பட்ட Sriwijaya Air flight SJ182 போயிங் விமானம், சிறிது நேரத்திலேயே விமான போக்குவரத்து அதிகாரிகளுடனான தொடர்பை இழந்து ரேடாரிலிருந்து மாயமானது.
தற்போது விமானத்தின் சிதறிய பாகங்கள் துண்டு துண்டுகளாக கடலுக்கு அடியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. விமானத்தில் பயணித்த 46 பெரியவர்கள், ஏழு குழந்தைகள், மூன்று கைக்குழந்தைகள் மற்றும் ஆறு குழு உறுப்பினர்களின் நிலை குறித்த தகவல் ஏதும் தற்போது வரை வெளியாகவில்லை.
ஆனால், தேடுதலின் போது சில சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காண உறவினர்கள், விமானத்தில் பயணித்த பயணிகளின் இரத்த மாதிரிகள் மற்றும் டிஎன்ஏ-வை சமர்பிக்க வேண்டும் என அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
இந்நிலையில், Ratih Windania என்ற பெண், விபத்துக்குள்ளான SJ182 விமானத்தில் ஏறியவுடன் தனது இரண்டு குழந்தைகளுடன் புகைப்படம் எடுத்து, ‘Bye bye family. நாங்கள் இப்போது வீட்டிற்கு செல்கிறோம்.’ என கடைசியாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
