வீட்டில் செல்வம் குறைவதற்கான அறிகுறி இது தான் - கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க
பொதுவாகவே பலரது வீ்ட்டிலும் நிதி நெருக்கடியானது அதிகமாகவே இருக்கும். ஒரு சில குடும்பம் செல்வ செழிப்புடன் வாழும், ஆனால் ஒரு சில குடும்பம் வறுமையில் வாடும்.
எல்லோரும் பணக்காரர்களாக இருக்க கடினமாக உழைக்கிறார்கள், ஆனால் சில நேரங்களில் அதுவும் பிரச்சினையை ஏற்படுத்தி விடும்.
வாஸ்து சாஸ்திரத்தின்படி, வீட்டைக் கட்டும் போது ஏற்படும் சில தவறுகளால் செல்வ இழப்பு ஏற்படுகிறது.
இந்த தவறுகள் காரணமாக, ஒருவரின் முன்னேற்றம் தடுக்கப்படும். செல்வத்தை இழக்கும் அளவிற்கு செல்லும்.
அந்தவகையில் நீங்கள் தினசரி செய்யும் ஒவ்வொரு வேலையின் காரணமாகவும் இது நிகழலாம். அந்தவகையில் வீட்டில் செல்வ குறைவு ஏற்படப்போவதற்கான அறிகுறிகள் குறித்து இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.
- கழுவபடாத எச்சில் பாத்திரங்களை கழுவாமல் அதிக நேரம் வைத்திருக்கக் கூடாது.
- வீட்டில் பெண்கள் விளக்கேற்றாமல் ஆண்கள் விளக்கேற்றக் கூடாது.
- தலைமுடி தரையில் உலாவருவது.
- ஒட்டறைகள் சேருவது.
- சூரிய மறைவுக்கு பின் வீட்டை சுத்தம் செய்யக் கூடாது.
- எச்சில் பொருள்கள் பாத்திரங்கள் ஆங்காங்கே இருக்கக் கூடாது.
- பெண்கள் தினமும் தலைக்கு குளிப்பவர்களை தவிர மற்றவர்கள் செவ்வாய் வெள்ளி தவிர மற்ற நாளில் தலை குளிப்பது.
- ஆண்கள் புதன் வெள்ளி தவிர மற்ற நாளில் தலை குளிப்பது.
- குழாய்களில் தண்ணிர் சொட்டுவது.
- சுவற்றில் ஈரம் தங்குவது.
- பூராண் போன்ற விஷ பூச்சிகள் வீட்டை சுற்றி உலாவுவது.
- அதிக நேரம் ஈர துணிகள் போட்டு வைப்பது.
- உணவு பொருள்கள் வீண்ணடிப்பது.
- உப்பு பால் சர்க்கரை அரிசி போன்றவற்றை சுத்த வைத்திருக்க வேண்டும்.
- குறைந்த பட்ச வெளிச்சம் இல்லாமல் மின்சாரம் சேமிப்பதாக வெளிச்சங்களை குறைப்பது.
- இல்லை இல்லை வராது வராது வேண்டாம் வேண்டாம் போன்ற வார்த்தைகளை அதிகம் உச்சரிப்பது.
- படுக்கையையும் பூஜை பொருட்களையும் வேலையாட்களை கொண்டு சுத்தம் செய்வது.
- வாசலில் செருப்பு துடப்பம் போன்றவற்றால் அலங்கோலப்படுத்தி வைத்து இருப்பது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |