100 ஆண்டுகளுக்கு முன் மூழ்கிய ‘டைட்டானிக்’ கப்பலுக்கும் ஓஷன் கேட் CEO-க்கும் என்ன தொடர்பு?
சமீபத்தில் உலகையை உலுக்கிய சம்பவம் என்றால், சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு விபத்துக்குள்ளான டைட்டானிக் கப்பலை பார்வையிட சென்ற 5 பேர் நீர்மூழ்கி கப்பலில் மாயமாகி உயிரிழந்தது தான்.
நடுக்கடலில் மூழ்கிய டைட்டானிக் கப்பல்
சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு அட்லாண்டிக் பெருங்கடலில் பயணம் செய்த மிகப் பிரமாண்டமான ‘டைட்டானிக்’ கப்பலில் பனிப்பாறையில் மோதி நடுக்கடலில் மூழ்கியது. இச்சம்பவத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். இன்று வரை இச்சம்பவம் காலத்தால் அழியாத சுவடாக உள்ளது.
இந்த உண்மைச் சம்பவம் ‘டைட்டானிக்’ என்ற திரைப்படமாக எடுக்கப்பட்டது. அந்த படத்தில் கடைசி காட்சியில் இரண்டு முதியவர்கள் ஒன்றாக கைக்கோர்த்து இறப்பது போல் காட்சியமைக்கப்பட்டிருக்கும்.
டைட்டானிக் கப்பலுக்கும் ஓஷன் கேட் CEO-க்கும் என்ன தொடர்பு
அந்த தாத்தா, பாட்டி காட்சிக்கும், ‘டைட்டான்’ விபத்தில் இறந்துபோன ஓசன் கேட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி Stockton Rush-க்கும் என்ன தொடர்புன்னு தெரியுமா?
டைட்டானிக் கப்பலிலிருந்து உயிர் பிழைத்தவர்கள் இந்த நிகழ்வை விவரித்தபோது,
கடந்த 1912ம் ஆண்டு அட்லாண்டிக் கடலில் டைட்டானிக் கப்பலில் 60 வயது மதிக்கத்தக்க இசிடர் (Isidor) மற்றும் இடா ஸ்ட்ராஸ் (Ida Straus) என்ற தம்பதியினர் பயணம் செய்தனர்.
அப்போது பனிப்பாறையில் மோதி டைட்டானிக் கப்பல் நடுக்கடலில் மூழ்க ஆரம்பித்தது. மரண விளிம்பில் மக்கள் பதறி கத்தி கூச்சலிட ஆரம்பித்தனர்.
உடனடியாக டைட்டானிக் கப்பலிலிருந்து சொந்த நாட்டிற்கு தப்பிக்க முதல் வகுப்பில் படகு இறக்கப்பட்டது. முதலில் பெண்களையும், குழந்தைகளையும் படகில் ஏற்றி தப்பிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டன.
இரண்டாவது படகு இறக்கப்பட்டது. அப்போது, 60 வயது கடந்தவர்கள் என்பதால் இசிடர் மற்றும் இடா ஸ்ட்ராஸ் படகில் ஏறிக்கொள்ள அதிகாரிகள் அனுமதி கொடுத்தனர். ஆனால், கப்பலில் குழந்தைகளும், பெண்களும் உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதைப் பார்த்த வயதான தம்பதி இருவரும் படகில் ஏற மறுத்துவிட்டனர்.
நியூ யார்க் நகரில் Ida Straus-க்கு நினைவு சின்னம்
டைட்டானிக் கப்பல் மூழ்கிக் கொண்டிருக்கும் போது, இரண்டு பேரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு கைகளை கோர்த்துக் கொண்டிருந்தனர்.
டைட்டானிக் கப்பல் முழுவதுமாக கடலில் மூழ்கிய பிறகு, 2 வாரங்கள் கழித்து இசிடரின் உடல் கடற்கரையில் ஒதுங்கியது. ஆனால், இரா ஸ்ட்ராஸ் உடல் கிடைக்கவில்லை.
எனவே, உயிரிழந்த அவரை நினைவுக்கூறும் வகையில், அமெரிக்காவின் நியூ யார்க் நகரில் Ida Straus-க்கு நினைவு சின்னம் வைக்கப்பட்டது.
அந்த 60 வயதான இசிடர் மற்றும் இடா ஸ்ட்ராஸ் கொள்ளு பேத்தி தான், தற்போது டைட்டானிக்கின் சிதைந்த பாகங்களை பார்வையிடச் சென்று விபத்தில் இறந்த ஓசன் கேட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஸ்டாக்டன் ரஷ்-ன் மனைவி வெண்டி ரஷ்.
வென்டி ரஷ் இதுவரை 3 முறைக்கு மேல் சிதைந்த டைட்டானிக் கப்பலை கடலுக்கு அடியில் சென்று பார்த்திருக்கிறாராம். தற்போது இது தொடர்பான தகவல் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த உலக மக்கள் நெஞ்சம் சற்றே ரணமாகியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |