ஹார்முஸ் கப்பல் போக்குவரத்து... புதிய முறையை அறிமுகப்படுத்திய ஈரான்
ஏறக்குறைய மூடப்பட்ட நிலையிலுள்ள ஹார்முஸ் நீரிணை வழியாகக் கப்பல்கள் கடந்து செல்ல, அதற்கான அனுமதியை வழங்கும் ஒரு மின்னஞ்சல் முன்னிபந்தனையாக அமையும் என கூறப்படுகிறது.
மின்னஞ்சல் வழிமுறை
ஈரானிய அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளதாக அரசு செய்தி ஊடகம் வெளியிட்டுள்ள தகவலில், ஹார்முஸ் நீரிணையில் தற்போது இறையாண்மை ஆட்சி முறை நடைமுறைக்கு வருவதாகவும்,

இம்முறையின் கீழ், ஹார்முஸ் நீரிணையைக் கடந்து செல்லத் திட்டமிடும் கப்பல் நிறுவனங்கள், இனி பாரசீக வளைகுடா நீரிணை ஆணையத்துடன் (PGSA) தொடர்புடைய ஓர் முகவரியிலிருந்து மின்னஞ்சல் வழிமுறைகளைப் பெற்றுக்கொள்ளும் எனவும் தெரிவித்துள்ளனர்.
மேலும், அனைத்து சர்வதேசக் கப்பல்களும் பின்பற்ற வேண்டிய, புதிய குறிப்பிட்ட பயண விதிகள் மற்றும் தேவைகளை இந்தத் தகவல்தொடர்புகள் விவரிக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சுங்கக் கட்டண முறை
அத்துடன், கப்பல்கள் நீர்வழிப்பாதையில் நுழைவதற்கு முன், தங்கள் செயல்பாடுகளை மாற்றியமைத்து, ஒரு வழித்தட அனுமதிச் சீட்டைப் பெற வேண்டியிருக்கும்.

இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுடன் தொடர்புடைய கப்பல்கள் மீதான கட்டுப்பாடுகளை முறைப்படுத்தவும், பகைமையற்றதாகக் கருதப்படும் பிற கப்பல்களுக்கு சுங்கக் கட்டண முறையை அறிமுகப்படுத்தவும் வழிவகுக்கும் சட்டத்தை ஈரான் நாடாளுமன்றம் பரிசீலித்து வருகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |