சீட் பெல்ட் அணிய மறுத்த குழந்தையால் விமானம் ரத்து - கனடாவில் நடந்த சம்பவம்
Toddler Refuses Seatbelt Flight Cancelled: கனடாவில், சீட் பெல்ட் அணிய மறுத்த குழந்தையால் விமானம் ரத்தானது.
விமானம் ரத்து
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாநிலம், விக்டோரியா விமான நிலையத்தில் Porter Airlines நிறுவனத்தின் PD444 விமானம், ஒரு சிறு குழந்தை சீட் பெல்ட் அணிய மறுத்ததால் ரத்து செய்யப்பட்டது.
விமானம் புறப்பட தயாராக இருந்தபோது, அந்த குழந்தை பயத்தில் இருக்கையின் கீழ் மறைந்துகொண்டது. பெற்றோர் மற்றும் விமான ஊழியர்கள் பலமுறை முயன்றும், குழந்தையை அமைதிப்படுத்தி சீட் பெல்ட் அணியச் செய்ய முடியவில்லை.

பாதுகாப்பு விதிகளின்படி, பயணிகள் take-off மற்றும் landing நேரங்களில் கட்டாயம் சீட் பெல்ட் அணிய வேண்டும். இதனால் விமானம் மீண்டும் டெர்மினலுக்கு திரும்பி, பயணிகள் அனைவரும் இறங்கினர். குழந்தை மற்றும் பெற்றோர் விமானத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர்.
அடுத்த நாள்...
ஆனால், இந்த செயல்முறை நீண்டதால், விமானம் 12:30 am curfew-ஐ மீறியது. இதனால் அந்த இரவு விமானம் ரத்து செய்யப்பட்டது. பயணிகள் அடுத்த நாள் விமானங்களில் மாற்றி அனுப்பப்பட்டனர். சிலர் பெற்றோரை குற்றம் சாட்டினாலும், மற்றவர்கள் குழந்தையின் பயத்தை புரிந்து கொள்ள வேண்டும் எனக் கூறினர்.
Porter Airlines நிறுவனம் பயணிகளிடம் மன்னிப்பு கேட்டுள்ளது. இந்த சம்பவம், விமானப் பயணங்களில் பாதுகாப்பு விதிகள் எவ்வளவு முக்கியம் என்பதை மீண்டும் வெளிப்படுத்துகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |