கப்பல்களுக்குச் சிறப்பு கட்டணம்... உடனடியாகக் கைவிட ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை
ஹார்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்தை அனுமதிக்க கப்பல்களுக்கு சிறப்பு கட்டணம் வசூலிக்கும் முடிவுக்கு ஈரான் வந்துள்ளதை அடுத்து அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அதை நிறுத்த வேண்டும்
ஹார்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் கப்பல்களின் மீது சுங்கக் கட்டணம் விதிக்கக்கூடும் என்று ஈரான் குறிப்பிட்டதைத் தொடர்ந்து, பதற்றங்கள் மேலும் அதிகரித்துள்ளன.

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் ஏற்கனவே இதேபோன்ற பரிந்துரைகளை முன்வைத்திருந்ததுடன், ஈரானுடன் இணைந்து சுங்கக் கட்டணம் விதிக்கும் சாத்தியக்கூறையும் வெளிப்படுத்தியிருந்தார்.
ஆனால் தற்போது தனது ட்ரூத் சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ள ட்ரம்ப், ஹார்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் எண்ணெய்க் கப்பல்களிடம் ஈரான் கட்டணம் வசூலிப்பதாகச் செய்திகள் வருகின்றன.
அவர்கள் அப்படிச் செய்யாமல் இருப்பது நல்லது; ஒருவேளை செய்தால், அவர்கள் இப்போதே அதை நிறுத்த வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். இன்னொரு சமூக ஊடகப் பதிவில்,
மிக விரைவில், ஈரானின் உதவியுடன் அல்லது இல்லாமல் எண்ணெய்க் கப்பல்கள் வெளியேறுவதை நீங்கள் பார்ப்பீர்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்துகொள்ளாமல் ஈரான் பிடிவாதமாக இருந்தால், மிக மோசமான நெருக்கடியை அவர்கள் எதிர்கொள்வார்கள் என்றும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
மட்டுமின்றி, ஹார்முஸ் நீரிணையை ஈரான் மிக மோசமாக நிர்வகித்து வருவதாகவும் ட்ரம்ப் குற்றஞ்சாட்டியுள்ளார். வளைகுடாப் பகுதிக்கும் இந்தியப் பெருங்கடலுக்கும் இடையே அமைந்துள்ள, முக்கியத்துவம் வாய்ந்த 167 கிலோமீற்றர் நீளமுள்ள நீரிணை வழியாகக் கப்பல்கள் செல்ல அனுமதிக்க, இரண்டு வார கால போர்நிறுத்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக ஈரான் ஒப்புக்கொண்டிருந்தது.

கப்பல் நிறுவனங்கள் குழப்பம்
ஆனால், மத்திய கிழக்குப்போருக்கான போர்நிறுத்தம் அமுலுக்கு வந்ததிலிருந்து, கடல்சார் கண்காணிப்புத் தரவுகளின்படி, வெறும் 10 கப்பல்கள் மட்டுமே அவ்வழியே கடந்து சென்றுள்ளன.

இதற்கு ஈரான் தரப்பில் இருந்து பல காரணங்கள் கூறப்படுகிறது. அத்துடன், அமெரிக்கா தரப்பில் இருந்தும் இஸ்ரேல் தரப்பில் இருந்தும் வெளியாகும் தகவல்களால் கப்பல் நிறுவனங்கள் குழப்பமடைந்துள்ளதுடன், துணிந்து செயல்பட மறுப்பதும் கப்பல் போக்குவரத்து சீரடையாமல் உள்ளதற்கு காரணமாக கூறுகின்றனர்.
மேலும், போர் இன்னும் முடிவடையவில்லை ஈரான் அருகே குவிக்கப்பட்டுள்ள அமெரிக்க இராணுவம், கப்பல்கள் என அனைத்தும் அங்கிருந்து வெளியேறும் கட்டத்தை எட்டவில்லை என்ற ட்ரம்பின் எச்சரிக்கையும் கப்பல் போக்குவத்தை முடக்கியுள்ளது.
இந்த நிலையில், துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் சனிக்கிழமையன்று பாகிஸ்தானில் ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். இதற்கிடையில், இஸ்ரேலும் லெபனானும் அடுத்த வாரம் வாஷிங்டனில் பேச்சுவார்த்தை நடத்தும் என்று வெளிவிவகார அமைச்சக அதிகாரி ஒருவர் வியாழக்கிழமை தெரிவித்தார்.

மார்ச் மாத தொடக்கத்தில் ஹிஸ்புல்லா மத்திய கிழக்கு போரில் நுழைந்ததிலிருந்து லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய மிகக் கடுமையான தாக்குதலில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்.
இது, அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே அமுலுக்கு வந்த 48 மணி நேரத்திற்குள் நிலவிய அமைதியற்ற போர் நிறுத்தத்தை ஆட்டம் காணச் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |