டிரம்ப் நிபந்தனையை ஏற்க மறுத்த ஹார்வர்ட்: 2.2 பில்லியன் டொலர் நிதி நிறுத்தம்!
மாணவர்கள் போராட்டம் தொடர்பாக விதித்த நிபந்தனைகளை ஹார்வர்ட் பல்கலைக்கழகம் ஏற்க மறுத்ததை அடுத்து டிரம்ப் நிர்வாகம் நிதியை அதிரடியாக நிறுத்தியுள்ளது.
டிரம்ப் நிபந்தனையை ஏற்க மறுத்த ஹார்வர்ட்
அமெரிக்க பல்கலைக்கழகங்களில் காசா போர் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்கு டிரம்ப் அரசு பல்கலைக்கழக நிர்வாகங்களுக்கு கடும் எச்சரிக்கை விடுத்தது.
இருப்பினும் ஹார்வர்ட் பல்கலைக்கழகம் மாணவர்களின் செயல்பாட்டைக் கட்டுப்படுத்த டிரம்ப் நிர்வாகம் விதித்த நிபந்தனைகளை ஏற்க மறுத்துவிட்டது.
நிதியை நிறுத்திய டிரம்ப்
இதனால் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்திற்கு வழங்க வேண்டிய 2.2 பில்லியன் அமெரிக்க டாலர் நிதியை டிரம்ப் நிர்வாகம் நிறுத்தி வைத்துள்ளது.
இது தொடர்பாக டிரம்ப் நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், சிவில் உரிமைகள் சட்டங்களை நிலை நிறுத்தும் பொறுப்பைக் கடைப்பிடிக்காத பல்கலைக்கழகங்களுக்கு நிதி கிடைக்காது.
கடந்த சில ஆண்டுகளாகவே பல்கலைக்கழகங்களில் கற்றல் சீர்குலைவு நடந்து வருகிறது.
யூத மாணவர்கள் மீதான துன்புறுத்தல் அதிகரித்து வருவதை ஏற்க முடியாது. மக்களின் வரிப்பணத்தை விரும்பினால், பல்கலைக்கழகங்கள் இந்தப் பிரச்சினையைத் தீவிரமாக எடுத்துக் கொண்டு அர்த்தமுள்ள மாற்றத்தைச் செய்ய வேண்டிய நேரம் இது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |