இறுகும் ஈரான் போர்... மத்திய கிழக்கில் Doomsday அணுசக்தி விமானங்களை களமிறக்கிய ட்ரம்ப்
அணு ஆயுதப் போர் குறித்த அச்சத்தை உருவாக்கும் வகையில் அமெரிக்க இராணுவம் மத்திய கிழக்கில் Doomsday அணுசக்தி கட்டளை விமானங்களை களமிறக்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அணு ஆயுதப் போர்
வெளியான தரவுகளின் அடிப்படையில், பிப்ரவரி 28 ஆம் திகதி ஈரான் மீதான போர் தொடங்கியதில் இருந்து அமெரிக்காவின் அணுசக்தி கட்டளை விமானங்கள் மத்திய கிழக்கில் பலமுறை வட்டமிட்டுள்ளது.

இந்த மிகப்பெரிய விமானங்கள் அணு ஆயுதப் போர் வெடித்தாலும் தப்பிக்கும் வகையில் கட்டமைக்கப்பட்டுள்ளது. மட்டுமின்றி அமெரிக்காவின் இராணுவ நடவடிக்கைகளை வான்வழியாக ஒருங்கிணைக்கிறது.
குறிப்பாக, இந்த விமானங்கள் ஜனாதிபதி மற்றும் போர் செயலாளருக்கு ஒரு கட்டளை மையமாக செயல்படுகிறது. மூன்றாம் உலகப் போர் வெடித்து அமெரிக்கா ஏற்கனவே தாக்குதலுக்கு உள்ளாகியிருந்தால், மெர்குரி விமானப்படை அணு ஆயுதத் தாக்குதலை முன்னெடுக்கும் திறன் கொண்டது.
மார்ச் 2 ஆம் திகதி இரண்டு E-6B மெர்குரி விமானங்கள் அமெரிக்கா மீது காணப்பட்டன, அதில் ஒன்று வளைகுடா கடற்கரையிலிருந்து பயணித்து மேரிலாந்தில் கடற்படை விமான நிலையத்தில் தரையிறங்குகிறது.
மற்றொன்று நெப்ராஸ்காவில் உள்ள ஆஃப்ஃபுட் விமானப்படை தளத்தில் இருந்து புறப்பட்டு பின்னர் மீண்டும் அங்கேயே தரையிறங்கியது. வெளியாகியுள்ள தகவலின் அடிப்படையில், அட்லாண்டிக் பெருங்கடலைக் கடந்து பாரசீக வளைகுடாவை நோக்கி மேலும் E-6B மெர்குரி விமானங்கள் களமிறக்கப்பட்டுள்ளதாகவே தெரிய வருகிறது.
சாதாரண தொலைபேசி இணைப்புகள் அல்லது இராணுவத்தின் கட்டுப்பாட்டு நிலையங்கள் அழிக்கப்பட்டால், ஜனாதிபதி ட்ரம்ப் அல்லது உயர் தலைவர்களிடமிருந்து கடற்படை அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களுக்கு உத்தரவுகளை அனுப்ப E-6B மெர்குரி விமானங்கள் பயன்படுத்தப்படுகிறது.
மத்திய கிழக்கில், போர் வெடித்த முதல் வாரத்தில் அமெரிக்க இராணுவத் தளங்கள், தூதரகங்கள் மற்றும் பிற முதன்மையான முகாம்கள் பல ஈரானிய ஏவுகணைத் தாக்குதல்களால் தாக்கப்பட்டுள்ளன.

சீனாவும் ரஷ்யாவும்
இந்த நிலையிலேயே, தற்போது E-6B மெர்குரி விமானங்கள் களமிறக்கப்பட்டுள்ளதாக தகவல் கசிந்துள்ளது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது நடத்திய ஆரம்ப தாக்குதல்களுக்குப் பிறகு அணு ஆயுதத் தாக்குதல் குறித்த அச்சுறுத்தல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
மட்டுமின்றி, நிலைமை கட்டுப்பாட்டை மீறி ஒரு பெரிய போருக்கு வழிவகுக்கும் என்று ஈரானின் நட்பு நாடுகளான சீனாவும் ரஷ்யாவும் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகிறது.

மேலும், மத்திய கிழக்கில் அமெரிக்கப் படைகளின் நிலைகள் குறித்த உளவுத் தகவல்களைப் பகிர்ந்து கொள்வதன் மூலம் அணு ஆயுத நாடான ரஷ்யா ஈரானுக்கு உதவத் தொடங்கியுள்ளது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
E-6B மெர்குரி விமானங்களில் பொதுவாக 22 அதிகாரிகள் பணியாற்றுவார்கள். ஒரு E-6B மெர்குரி விமானத்தை உருவாக்க 141 மில்லியன் டொலர் செலவிடப்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |