ஏலியன்கள் குறித்து வெளியாக உள்ள ரகசியங்கள் - டிரம்ப் உத்தரவு
ஏலியன்கள் குறித்த ரகசிய ஆவணங்களை வெளியிட டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
ஏலியன்கள் குறித்த அமெரிக்க ஆவணங்கள்
ஏலியன்கள் என அழைக்கப்படும் வேற்று கிரகவாசிகள் உலகில் இருப்பதாக பலரும் கூறி வந்தாலும், அது தற்போது வரை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை.

ஆனால் அமெரிக்காவின் நெவேடா பகுதியில் உள்ள Area 51 என்னும் இடத்தில் வேற்றுகிரக வாசிகளை வைத்து அமெரிக்கா ஆராய்ச்சி செய்து வருவதாக நீண்ட காலமாக கூறப்பட்டது வந்தது.
சமீபத்தில் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பாரக் ஒபாமா, "உலகில் ஏலியன்கள் இருக்க வாய்ப்புள்ளது. ஆனால் நான் அவரை பார்த்தது இல்லை" என கூறியது ஏலியன்கள் குறித்த விவாதத்தை மீண்டும் எழுப்பியது.

ஒபாமாவின் இந்த கருத்து குறித்து பதிலளித்த டிரம்ப், "அவர் அதை ரகசியத் தகவலிலிருந்து எடுத்தார், அவர் அப்படிச் செய்யக்கூடாது, அவர் ஒரு பெரிய தவறு செய்துவிட்டார். இந்த ஆவணங்களை வெளியிடுவதன் மூலம் நான் அவரை இந்த சிக்கலில் இருந்து மீட்கலாம்" என கூறினார்.
வேற்று கிரகவாசிகள் இருப்பதற்கான ஆதாரங்களைப் பார்த்தீர்களா என்று டிரம்பிடம் கேட்டபோது, "அவை உண்மையானவையா இல்லையா என்பது எனக்குத் தெரியாது" என்று பதிலளித்தார்.
டிரம்ப் உத்தரவு
இந்நிலையில், அமெரிக்கா வசம் உள்ள ஏலியன்கள், பறக்கும் தட்டுகள் உள்ளிட்டவை குறித்த அனைத்து ரகசிய ஆவணங்களையும் பொதுவெளியில் வெளியிட சம்மந்தப்பட்ட அனைத்து துறைகளுக்கும் டிரம்ப் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், "மக்களிடையே உள்ள அதீத ஆர்வத்தின் அடிப்படையில், வேற்றுகிரகவாசிகள், அடையாளம் காணப்படாத வான்வழி நிகழ்வுகள் (UAP) மற்றும் அடையாளம் காணப்படாத பறக்கும் பொருள்கள்(UFOs) தொடர்பான அரசாங்க கோப்புகளை வெளியிடும் செயல்முறையைத் தொடங்க தொடர்புடைய துறைகளுக்கு வழிகாட்டுதல் வழங்கியுள்ளேன்" என தெரிவித்துள்ளார்.
"Based on the tremendous interest shown, I will be directing the Secretary of War, and other relevant Departments and Agencies, to begin the process of identifying and releasing Government files related to alien and extraterrestrial life, unidentified aerial phenomena (UAP), and… pic.twitter.com/3fKQ7wrSvi
— The White House (@WhiteHouse) February 20, 2026
இந்த ஆவணங்கள் எப்போது வெளியாகும், முழு ஆவணங்களையும் அமெரிக்கா வெளியிடுமா என சமூகவலைத்தளங்களில் அனைவரும் விவாதிக்க தொடங்கி விட்டனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |