விண்வெளியில் இருந்து கூட அமெரிக்காவை தாக்க முடியாது - கோல்டன் டோமை அறிமுகம் செய்த டிரம்ப்
அமெரிக்க அதிபர் டிரம்ப், கோல்டன் டோம் என்னும் அதிநவீன ஏவுகணைத் தடுப்பு அமைப்பை அறிமுகப்படுத்தியுள்ளார்.
கோல்டன் டோம்
உலக நாடுகள் தங்களது பாதுகாப்பு கட்டமைப்பை மேம்படுத்த, ஒவ்வொரு ஆண்டும் பல ஆயிரம் கோடி நிதி ஒதுக்கி வருகிறது.
பிற நாடுகள் தரைப்படை, விமானப்படை, கப்பல் படை வைத்துள்ள நிலையில் அமெரிக்கா மட்டுமே விண்வெளி படையையே வைத்துள்ளது.
அதேபோல், தற்போது பிற நாடுகளிடம் இல்லாத கோல்டன் டோம் என்ற அதிநவீன ஏவுகணைத் தடுப்பு அமைப்பை, அமெரிக்காவிற்கு உருவாக்க உள்ளதாக டிரம்ப் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய டிரம்ப், " தேர்தல் பிரசாரத்தின் போதே, வெளிநாட்டு ஏவுகணை தாக்குதல் அச்சுறுத்தலில் இருந்து நமது நாட்டை பாதுகாக்க ஒரு அதிநவீன ஏவுகணை பாதுகாப்பு அமைப்பை கட்டமைப்பேன் என்று அமெரிக்க மக்களுக்கு உறுதியளித்தேன். அதைத்தான் இன்று நாம் செய்து கொண்டிருக்கிறோம்.
President Trump announced the Golden Dome missile defense shield to protect the homeland from advanced missile threats.
— The White House (@WhiteHouse) May 21, 2025
Included in the One, Big, Beautiful Bill, this project aims to ensure American security. Congress must pass the bill and send it to the President’s desk. pic.twitter.com/U0gwZ9DNnV
இந்த கோல்டன் டோம் ஏவுகணை பாதுகாப்பு அமைப்புக்கான டிசைனை தேர்ந்தெடுத்து விட்டோம். இந்த கோல்டன் டோம் உருவாக்கப்பட்ட பின்னர், விண்வெளியில் இருந்து ஏவுகணையை ஏவினாலும், அது அமெரிக்காவில் விழாதப்படி இந்த அமைப்பு தடுத்துவிடும்.
நமது இரண்டாவது அதிபர் பதவிக்காலம் முடிவதற்குள் நிறைவடையும். இதில் இணைய கனடாவும் விருப்பம் தெரிவித்துள்ளது" என தெரிவித்துள்ளார்.
மொத்த செலவு
இந்த கோல்டன் டோம், கப்பல் ஏவுகணைகள், பாலிஸ்டிக் ஏவுகணைகள், ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள், டிரோன்கள் என எந்த ஏவுகணையாக இருந்தாலும், அணு ஆயுத தாக்குதலாக இருந்தாலும் அதில் இருந்து பாதுகாப்பை வழங்கும் என பென்டகன் தலைவர் பீட் ஹெக்செத் தெரிவித்துள்ளார்.
இந்த திட்டத்தின் மதிப்பு 175 பில்லியன் டொலர் என மதிப்பிடப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாக 25 பில்லியன் டொலரை இதற்காக ஒதுக்கியுள்ளார். அடுத்த 20 ஆண்டுகளில், இதற்கான செலவு 500 பில்லியன் டொலராக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்த திட்டத்திற்கு, அமெரிக்க விண்வெளிப் படை ஜெனரல் மைக்கேல் குட்லின் தலைமை தாங்குவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |