எண்ணெய் உற்பத்தியாளர்களுக்கு விதிக்கப்பட்ட தடைகள் நீக்கம்- ட்ரம்ப் அறிவிப்பு
அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப், ஈரான் போரின் தாக்கத்தால் உலகளாவிய எரிசக்தி விலைகள் அதிகரித்துள்ள நிலையில், சில எண்ணெய் உற்பத்தியாளர்களுக்கு விதிக்கப்பட்ட தடைகளை நீக்க உள்ளதாக அறிவித்துள்ளார்.
கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 120 டொலர் வரை உயர்ந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 90 டொலருக்கு கீழ் சரிந்தது.
சில நாடுகளுக்கு விதிக்கப்பட்ட தடைகளை தற்காலிகமாக நீக்குகிறோம். நிலைமை சீராகும் வரை இது தொடரும் என ட்ரம்ப் கூறியுள்ளார்.
அமெரிக்கா தற்போது ரஷ்யா, ஈரான், வெனிசுலா ஆகிய நாடுகளின் எண்ணெய் துறைகளுக்கு தடைகள் விதித்துள்ளது. Reuters தகவலின்படி, ரஷ்யாவுக்கு விதிக்கப்பட்ட தடைகளை தளர்த்தும் வாய்ப்பு அதிகம்.

கடந்த வாரம், அமெரிக்க நிதியமைச்சகம் இந்தியாவிற்கு ரஷ்ய எண்ணெய் விற்பனைக்கு 30 நாள் விலக்கு அளித்திருந்தது.
ட்ரம்ப் கருத்துக்குப் பிறகு, Brent Crude விலை 84 டொலருக்கு சரிந்தது. ஆனால், ஹார்முஸ் நீரிணை மூடப்பட்டிருப்பதால், உலகளாவிய எண்ணெய் விநியோகம் பெரும் சவாலில் உள்ளது.
இந்த நிலை நீடித்தால், எண்ணெய் விலை 150 முதல் 200 டொலர் வரை உயரக்கூடும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
போர் விரைவில் முடிவடையும் என ட்ரம்ப் கூறியிருந்தாலும், எதிரி முழுமையாக தோற்கடிக்கப்படும் வரை தாக்குதல்கள் தொடரும் எனவும் கூறியுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |