ஈரானில் 3 அணுசக்தி தளங்களை வெற்றிகரமாக தாக்கிய அமெரிக்கா - ட்ரம்ப் அறிவிப்பு
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரானில் உள்ள மூன்று முக்கிய அணுசக்தி தளங்களில் மேற்கொண்ட தாக்குதல் வெற்றிகரமாக நிறைவு பெற்றதாக அறிவித்துள்ளார்.
Fordo, Natanz, Isfahan ஆகிய அணு வளாகங்கள் மீது முழு ரகசிய தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், Fordo தளத்தின் மீது முழுமையான வெடிகுண்டுகள் வீசப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
“எங்கள் விமானங்கள் எல்லாம் ஈரான் விமானப் பரப்பை விட்டு பத்திரமாக வெளியேறிவிட்டன. இது அமெரிக்க வரலாற்றில் முக்கிய தருணம்,” என்று ட்ரம்ப் தனது Truth Social பக்கத்தில் பதிவிட்டார்.
இந்த தாக்குதலுக்கு B-2 stealth bombers பயன்படுத்தப்பட்டதாக Axios இணையதளத்தில் இஸ்ரேல் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
Fordo என்பது பாறைமலையின் அடிப்பகுதியில் அமைந்திருக்கும், தாக்கவும் அழிக்கவும் கடினமான தளமாகும்.
ட்ரம்ப், வெற்றிகரமான தாக்குதலை தொடர்ந்து "இப்போது சமாதானத்தின் நேரம்!" என தெரிவித்ததோடு, இஸ்ரேலும், உலகமும் இந்த தாக்குதலில் புரிந்துணர வேண்டிய தருணம் இது எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையடுத்து, இஸ்ரேலிய பிணைக்கைதி Matan Zanguaker-ன் தாயார் சமூக வலைதளத்தில் எழுதிய உணர்ச்சிகாரமான பதிவு முக்கியத்துவம் பெற்றுள்ளது:
“இப்போது பலியானவர்களுக்காக முழுமையான அடக்கம் செய்ய முடியும். இப்போது கணவனை மீட்டுவைக்கலாம். இப்போது யுத்தத்தை முடிக்கலாம்.” என கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |