எந்த நேரத்திலும் தாக்குதலுக்கு தயாராக... ஈரானுக்கு கடும் எச்சரிக்கை விடுத்த ட்ரம்ப்

Donald Trump Iran
By Arbin Jan 02, 2026 08:43 PM GMT
Report

அரசுக்கு எதிராக போராட்டத்தில் குதித்துள்ள மக்களைக் கொல்ல ஈரான் முடிவு செய்தால், தாக்குதலுக்கு எந்த நேரத்திலும் தயாராக அமெரிக்கா இருப்பதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார்.

ஆறு பேர் கொல்லப்பட்டதாக

ஈரானில் விலைவாசி உயர்வுக்கு எதிராக மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டத்தில் குதித்துள்ளனர். இந்த நிலையில் நாட்டின் பல நகரங்களில் வியாழக்கிழமை அன்று போராட்டக்காரர்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே மோதல்கள் ஏற்பட்டன.

எந்த நேரத்திலும் தாக்குதலுக்கு தயாராக... ஈரானுக்கு கடும் எச்சரிக்கை விடுத்த ட்ரம்ப் | Trump Warns Iran The Us Is

இந்த அமைதியின்மை தீவிரமடைந்த நிலையில், ஆறு பேர் கொல்லப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தலைநகர் தெஹ்ரானில் உள்ள கடைக்காரர்கள், அதிக விலைவாசி மற்றும் பொருளாதார மந்தநிலையைக் கண்டித்து ஞாயிற்றுக்கிழமை வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

இந்த நடவடிக்கை மெல்ல, நாடு முழுவதும் வியாபித்துள்ளது. இதனையடுத்து தனது Truth சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ள ஜனாதிபதி ட்ரம்ப், ஈரான் தனது வழக்கப்படி அமைதியான போராட்டக்காரர்களைச் சுட்டுக் கொடூரமாகக் கொன்றால், அமெரிக்கா அவர்களின் உதவிக்கு வரும்.

பிரெஞ்சு தம்பதி... பிரித்தானியாவில் தொடர்பு: சுவிட்சர்லாந்தை உலுக்கிய கோர சம்பவத்தில் புதிய தகவல்

பிரெஞ்சு தம்பதி... பிரித்தானியாவில் தொடர்பு: சுவிட்சர்லாந்தை உலுக்கிய கோர சம்பவத்தில் புதிய தகவல்

இந்த விவகாரத்தில் ஈரானுக்கு எதிராக செயல்பட அமெரிக்கா எந்த நேரத்திலும் தயார் நிலையில் உள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார். ஆனால், ஈரானின் உயர் தலைவரின் மூத்த ஆலோசகரான அலி லாரிஜானி தெரிவிக்கையில்,

ஈரானிய அரசியல் மற்றும் சமுகப் போராட்டங்களில் அமெரிக்கா தலையிட முயற்சிப்பது இப்பிராந்தியம் முழுவதும் குழப்பத்திற்கு வழிவகுக்கும் என்றார்.

எந்த நேரத்திலும் தாக்குதலுக்கு தயாராக... ஈரானுக்கு கடும் எச்சரிக்கை விடுத்த ட்ரம்ப் | Trump Warns Iran The Us Is

பொருளாதார நெருக்கடிக்கு எதிராக ஈரானில் கடந்த மூன்று ஆண்டுகளில் நடந்த மிகப்பெரிய போராட்டத்தில், பல மாகாணங்களில் வன்முறை சம்பவங்கள் பதிவாகியுள்ளது, இதில் பலர் மரணமடைந்துள்ளனர்.

கலவரத் தடுப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதுடன், பின்வாங்கப் போவதில்லை என்று சபதம் செய்த போராட்டக்காரர்களைப் பெருமளவில் கைது செய்துள்ளனர்.

ரஷ்யத் தளபதியைக் கொல்ல 500,000 டொலர் செலவிட்ட புடின் நிர்வாகம்: பின்னர் நடந்த திடுக்கிடும் திருப்பம்

ரஷ்யத் தளபதியைக் கொல்ல 500,000 டொலர் செலவிட்ட புடின் நிர்வாகம்: பின்னர் நடந்த திடுக்கிடும் திருப்பம்

வியாழக்கிழமை இரவு நெருங்கியதும், மேலும் பல நகரங்கள் போராட்டங்களில் இணைந்தன. பல இடங்களில் மோதல்கள் தீவிரமடைந்தன. இதைத் தொடர்ந்து, அதிகாரிகள் கூடுதல் படைகளை அனுப்பினர்.

போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை

தெருக்களில் திரண்டிருந்த மக்கள், இந்த ஆண்டு இரத்தத்தின் ஆண்டு, சையத் அலி தூக்கி எறியப்படுவார் மற்றும் சர்வாதிகாரிக்கு மரணம் உறுதி என்பது போன்ற அரசாங்கத்திற்கு எதிரான முழக்கங்களை எழுப்பினர்.

கண்மூடித்தனமான மேற்கத்தியத் தடைகளால் 40 சதவீத பணவீக்கத்தால் பாதிக்கப்பட்ட பொருளாதாரம் கடும் நெருக்கடியை எதிர்கொள்ளும் நிலையில், ஒரு முக்கியமான தருணத்தில் இந்த அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.

எந்த நேரத்திலும் தாக்குதலுக்கு தயாராக... ஈரானுக்கு கடும் எச்சரிக்கை விடுத்த ட்ரம்ப் | Trump Warns Iran The Us Is

ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான், போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த விரும்புவதாக சமிக்ஞை செய்ய முயற்சி செய்து வருகிறார். ஈரானின் ரியால் நாணயம் வேகமாக மதிப்பு இழந்திருப்பதாலும், ஒரு அமெரிக்க டாலரின் மதிப்பு தற்போது சுமார் 1.4 மில்லியன் ரியாலாக இருப்பதாலும், தன்னால் அதிகம் எதுவும் செய்ய முடியாது என்பதை பெசெஷ்கியான் ஒப்புக்கொண்டுள்ளார்.

ஈராக்கில் அமெரிக்கா உள்ளிட்ட கூட்டுப்படைகளின் போருக்கு முன்னர் டொலருக்கு எதிரான அங்குள்ள தினாரின் மதிப்பும் தற்போதைய மதிப்பும் ஒப்பிடுகையில், மத்திய கிழக்கு நாடுகளை மேற்கத்திய வல்லரசுகள் திட்டமிட்டு நசுக்கி வருவது புலப்படும் என்கிறார்கள் அரசியல் நிபுணர்கள்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்
மரண அறிவித்தல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Scarborough, Canada, London, United Kingdom

25 May, 2016
15ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை வீமன்காமம், Catford, United Kingdom

05 Jun, 2011
7ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, முரசுமோட்டை, Noisy-le-Grand, France, உதயநகர்

05 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Toronto, Canada

01 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
மரண அறிவித்தல்

அல்வாய், Colchester, United Kingdom

29 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
அகாலமரணம்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, நல்லூர், கனடா, Canada

02 Jun, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

03 Jun, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, இளவாலை

02 Jun, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada

30 May, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

22 May, 2016
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US