மகப்பேறு அறுவை சிகிச்சை செய்த 100க்கும் அதிகமான மருத்துவர்கள் பணியிடை நீக்கம்: துருக்கி அரசு அதிரடி
துருக்கியில் மகப்பேறு அறுவை சிகிச்சை செய்த 100க்கும் மேற்பட்ட மருத்துவர்களை பணியிடை நீக்கம் செய்து அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.
மருத்துவர்கள் பணியிடை நீக்கம்
துருக்கியில் பிரசவத்தின் போது அறுவை சிகிச்சைக்கான முறையான காரணங்கள் ஏதுவும் இல்லாமல் அதிகமான மகப்பேறு அறுவை சிகிச்சையை மேற்கொண்ட 100க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் தண்டிக்கப்பட்டுள்ளனர்.
இதன்படி, சம்பந்தப்பட்ட மருத்துவர்களுக்கு அபராதம், கட்டாய மறு பயிற்சி மற்றும் பணியிடை நீக்கம் செய்யப்படுவதாக உத்தரவிடப்பட்டுள்ளது.

கடந்த 2025ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தனியார் மருத்துவமனைகளில் எந்தவொரு முறையான காரணங்கள் இன்றி மகப்பேறு அறுவை சிகிச்சை செய்வதற்கு தடை விதித்து புதிய விதிகள் அறிமுகப்படுத்தப்பட்டு ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்நிலையில் தான் துருக்கிய அரசின் இந்த சமீபத்திய உத்தரவானது வெளியாகியுள்ளது.
துருக்கி அரசின் இந்த அதிரடி முடிவுக்கு காரணம், 2023ம் ஆண்டு வெளியான தரவுகளின் படி, துருக்கி தான் மகப்பேறு அறுவை சிகிச்சையின் விகிதங்களில் அதிகமாக இருந்தது.
ஒவ்வொரு 1000 பிரசவங்களில் 615 அறுவை சிகிச்சை மூலம் செய்யப்படுகிறது என அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து நாட்டில் அறுவை சிகிச்சை எண்ணிக்கையை குறைக்கும் விதமாக அரசு தீவிர முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது.

மருத்துவர்கள் சங்கம் எதிர்ப்பு
இந்நிலையில் துருக்கிய அரசின் மறு பயிற்சி உத்தரவுக்கு அந்நாட்டு மருத்துவ சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
மேலும், சுகப் பிரசவத்திற்கு 12 மணி நேரம் வரை ஆகும் நிலையில், அறுவை சிகிச்சைக்கு 30 நிமிடங்கள் மட்டுமே தேவைப்படுகிறது.
அத்துடன் பிரசவ கால சிக்கல்கள் மற்றும் சட்ட பிரச்சினைகளில் இருந்து தவிர்க்கவே மருத்துவர்கள் அறுவை சிகிச்சை முறைகளை தேர்ந்தெடுப்பதாக தெரிவித்துள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |