ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகள்: அறுவை சிகிச்சைக்குப் பின் நிகழ்ந்த துயரம்

Brazil
By Balamanuvelan Aug 22, 2026 05:17 AM GMT
Report

Twin girls born joined at the head die minutes after being separated: தலை ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகளை பிரிக்கும் அறுவை சிகிச்சை பலனளிக்காமல் பிள்ளைகள் உயிரிழந்துவிட்டார்கள்.

பிரேசில் நாட்டில், தலை ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகளை பிரிக்கும் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்த நிலையிலும், குழந்தைகளை காப்பாற்றமுடியாமல் போய்விட்டது.

ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகள்

பிரேசில் நாட்டில் அமரில்டோ டி சில்வா (Amarildo Batista da Silva) என்னும் நபருக்கு பிறந்த இரட்டைக் குழந்தைகள், தலை ஒட்டிப் பிறந்துள்ளன. 

ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகள்: அறுவை சிகிச்சைக்குப் பின் நிகழ்ந்த துயரம் | Twin Girls Born As Joined Head Die After Separated

பிள்ளைகள் மூன்று வயதை எட்ட இருந்த நிலையில், பிள்ளைகளை பிரிக்கும் அறுவை சிகிச்சைகளை மருத்துவர்கள் மேற்கொண்டுள்ளார்கள்.

உண்மை என்னவென்றால், இரண்டு ஆண்டுகளாக குழந்தைகளை தங்கள் கண்காணிப்பிலேயே வைத்திருந்த மருத்துவர்கள், பிள்ளைகளை தனித்தனியாக பிரிப்பதற்கான அறுவை சிகிச்சைகளை ஓராண்டாக மேற்கொண்டு வந்துள்ளார்கள்.

அதாவது, இதற்கு முன் பிள்ளைகளுக்கு நான்கு அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளன. கடைசியாக, அவர்களை தனியாக பிரிக்கும் கடைசி அறுவை சிகிச்சை, இம்மாதம், அதாவது, ஆகத்து மாதம் 15ஆம் திகதி நடைபெற்றுள்ளது. 


விடயம் என்னவென்றால், வெற்றிகரமாக மருத்துவர்கள் இரண்டு குழந்தைகளையும் தனித்தனியாக பிரித்துள்ளார்கள்.

ஆனால், ஒரு உடல் போல செயல்பட்டுவந்த அந்தக் குழந்தைகளின் உடல் பிரிக்கப்பட்டபோது, அதைத் தாங்கிக்கொள்ளும் சக்தி அந்த உடலுக்கு இல்லாமல் போயுள்ளது.

ஒரு குழந்தைக்கு இரத்த அழுத்தம் அதிகரிக்க, மற்ற குழந்தைக்கு இரத்த அழுத்தம் குறைய, உடலின் உள்ளுறுப்புகளுக்கு போதுமான இரத்தம் செல்லாமல், உள்ளுறுப்புகள் செயலிழந்து, மாரடைப்பு ஏற்பட்டு குழந்தைகள் இருவரும் உயிரிழந்துவிட்டனர்.

அவர்களில் ஒரு குழந்தையின் பெயர் ஹெலனா, அவளது சகோதரியின் பெயர், ஹெலோய்ஸா. ஆகத்து மாதம் 15ஆம் திகதி, தங்கள் மூன்று வயதை எட்டும் முன், ஹெலனா 11.37 மணிக்கும், ஹெலோய்ஸா 11. 51 மணிக்கும் உயிரிழந்துள்ளனர். 

எம்.பி மகன் ஒட்டிய கார் மோதி இளம்பெண் உயிரிழப்பு - கைது செய்யாத காவல்துறை

எம்.பி மகன் ஒட்டிய கார் மோதி இளம்பெண் உயிரிழப்பு - கைது செய்யாத காவல்துறை

அறுவை சிகிச்சை வெற்றியாக முடிந்த நிலையிலும், பிள்ளைகளின் உடல் நிலை மிகவும் பலவீனமாக இருந்ததால், அவர்களைக் காப்பாற்ற முடியாமல் போயுள்ளது.

ஏற்கனவே, பிள்ளைகள் இருவருக்கும் நிமோனியா பிரச்சினை இருந்ததால் அவர்கள் தொண்டையில் துவாரமிடப்பட்டு சுவாசிப்பதற்காக குழாய்கள் பொருத்தப்பட்டிருந்திருக்கின்றன.

அதேபோல, குழந்தைகளால் சாப்பிட முடியாததால், அவர்கள் வயிற்றில் துவாரமிடப்பட்டு குழாய் வழியாகத்தான் உணவு செலுத்தப்பட்டு வந்துள்ளது.

ஆக, நீண்ட காலமாக பலவீனமாக இருந்த உடல்கள் பிரிக்கப்பட, அதை அவர்களால் தாங்கிக்கொள்ள இயலாமல், மாரடைப்பு ஏற்பட, பிள்ளைகள் உயிரிழந்துவிட்டார்கள்! 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  


மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US