கூடுதலாக £16 மில்லியன் பவுண்டுகளை உக்ரைனுக்கு ஒதுக்கியுள்ள பிரித்தானியா
உக்ரைனின் இணைய பாதுகாப்பு திட்டத்தை ஆதரிக்கும் விதமாக £16 மில்லியன் பவுண்டுகளை லண்டன் ஒதுக்கியுள்ளது.
மேற்கத்திய ஆயுதங்கள்
உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கையில் முதல்முறையாக உக்ரைனிய படைகள் எதிர்ப்பு தாக்குதலை முன்னெடுத்து வருகிறது.
இந்த எதிர்ப்பு தாக்குதலில் மேற்கத்திய நாடுகளிடம் இருந்து பெறப்பட்ட ஆயுதங்களையே உக்ரைனிய வீரர்கள் பெரும்பாலும் பயன்படுத்தி வருகின்றனர்.
Twitter
இதன்மூலம் உக்ரைனின் தெற்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் உள்ள போர் முன்வரிசையில் உக்ரைனிய வீரர்கள் வேகமாக முன்னேறி வருகின்றனர்.
பிரித்தானியா ஆதரவு
ரஷ்யாவின் போர் நடவடிக்கை தொடங்கியதில் இருந்து இதுவரை உக்ரைனுக்கு அனைத்து வகையிலும் பிரித்தானியா உறுதுணையாக நின்று வருகிறது.
நிதி உதவி, ஆயுத உதவி, வீரர்களுக்கான பயிற்சி என அனைத்து பிரிவிலும் உக்ரைனுக்கு பிரித்தானிய பக்கபலமாக நின்று வருகிறது.
London to allocate £16 million to support Ukrainian cybersecurity program
— NEXTA (@nexta_tv) June 18, 2023
Another 9 million pounds may be sent by other allies of Kyiv, Reuters reports. This will allow Kyiv to more effectively protect its critical infrastructure from Russian attacks, the British government has… pic.twitter.com/OWR2UGQ7fG
இந்நிலையில் உக்ரைனின் இணைய பாதுகாப்பு திட்டத்தை(cybersecurity) ஆதரவளிக்கும் விதமாக பிரித்தானியா £16 மில்லியன் பவுண்டுகளை ஒதுக்கியுள்ளது.
இந்த உதவி ரஷ்ய தாக்குதலில் இருந்து உக்ரைனின் முக்கியமான உள்கட்டமைப்பு வசதிகளை பாதுகாக்க கீவ்விற்கு துணையாக இருக்கும் என பிரித்தானிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.
பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்கின் கூற்றுப்படி, வங்கி சேவை முதல் எரிசக்தி விநியோகம் வரையிலான உக்ரைனின் முக்கிய சேவை கட்டமைப்புகளை பாதுகாக்க உதவும் என தெரிவித்துள்ளார்.
அதே சமயம் பிற கூட்டாளிகளிடம் இருந்து உக்ரைன் கூடுதலாக 9 மில்லியன் பவுண்டுகளை பெறலாம் ராய்ட்டர்ஸ் அறிக்கைகள் தகவல் தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |