பிரித்தானியாவின் F-35 போர்விமானத்தில் ஏற்பட்ட சிக்கல்., கேரளாவில் அவசரமாக தரையிறக்கம்
பிரித்தானியாவின் F-35 போர்விமானம் இந்தியாவின் கேரள மாநிலத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவைச் சேர்ந்த ஒரு F-35 போர் விமானம், எரிபொருள் குறைவால், இந்தியாவில் திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் சனிக்கிழமை இரவு அவசரமாக தரையிறங்கியது.
இந்த போர் விமானம், இந்தியக் கடற்கரையில் இருந்து சுமார் 100 நாட்டிகல் மைல்கள் தொலைவில் உள்ள Aircraft Carrier போர்கப்பலில் இருந்து புறப்பட்டதாக கூறப்படுகிறது.
ஆனால், கொடிய வானிலை காரணமாக, மீண்டும் கப்பலுக்கு திரும்ப முடியாமல் போனதால், பைலட் அவசர தரையிறக்கம் கோரினார்.
உடனடியாக திருவனந்தபுரம் விமான நிலைய அதிகாரிகள் உரிய நடவடிக்கைகள் எடுத்து, விமானத்தை பாதுகாப்பாக தரையிறக்க உதவினர்.
தற்போது, விமானம் உள்நாட்டு டெர்மினலில் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டுள்ளது.
இந்திய இராணுவம் மற்றும் விமானப்படை அதிகாரிகள், ஞாயிற்றுக்கிழமை மதியம் இந்த விமானத்தை ஆய்வு செய்ய வரவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எரிபொருள் நிரப்பும் பணிகள், பாதுகாப்பு விசாரணைகளுக்கு பின்னரே நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வு, இந்திய விமான துறை மற்றும் பாதுகாப்புத் துறையின் சுறுசுறுப்பையும், சர்வதேச நம்பிக்கையையும் வெளிப்படுத்துகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |