உலகக் கோப்பை கால்பந்து போட்டி: 2318 பேருக்கு பயணத் தடை விதித்து பிரித்தானிய அரசு உத்தரவு
கால்பந்து உலகக் கோப்பையை முன்னிட்டு கிட்டத்தட்ட 2000 க்கும் மேற்பட்டோருக்கு பிரித்தானிய அரசு பயணத் தடை விதித்துள்ளது.
இங்கிலாந்து அரசு அதிரடி
நடைபெற இருக்கும் உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் வன்முறை சம்பவங்கள் உருவாவதை தடுத்த பிரித்தானிய அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது.
அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளில் நடைபெற இருக்கும் இந்த உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளை காணச் செல்ல கிட்டத்தட்ட 2000 க்கும் அதிகமானோருக்கு பிரித்தானிய அரசு தடை விதித்துள்ளது.

அபாயகரமான பயணிகள் என்று அடையாளம் காணப்பட்ட இவர்கள், கால்பந்து போட்டி நடைபெறும் நாட்டிற்கு செல்ல பிரித்தானிய அரசு பயணத் தடை விதித்துள்ளது.
திங்கட்கிழமை நிலவரப்படி கிட்டத்தட்ட 2,318 பேர் உலகக் கோப்பை போட்டிகள் நடைபெறும் நாட்டிற்கு செல்ல பயண தடை விதிக்கப்பட்டு இருப்பதாக இங்கிலாந்து உள்துறை அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது.
மேலும் இங்கிலாந்து, வேல்ஸ் கால்பந்து நிர்வாகத்தின் தடை உத்தரவை பெற்றவர்களுக்கு அரசு கடுமையான விதிமுறைகளையும் விதித்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |