அணுகுண்டு ஏவுதிறன் கொண்ட போர் விமானங்களை வாங்க பிரித்தானியா திட்டம் - பாதுகாப்பை விரிவாக்க நடவடிக்கை
பிரித்தானியா, பனிப்போர் காரத்திற்குப் பிறகு மிகப்பாரிய பாதுகாப்பு விரிவாக்கத்தின் ஒரு பகுதியாக, அணுகுண்டுகளை ஏந்தும் திறன் கொண்ட போர் விமானங்களை வாங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது, நாட்டின் அணுசக்தி தடுப்புத்திறனை (nuclear deterrence) விரிவுபடுத்தும் ஒரு முக்கிய கட்டமாக கருதப்படுகிறது.
அணுகுண்டு ஏவுதிறன் கொண்ட போர் விமானங்கள்
பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தலைமையிலான அரசு, குறைந்த சக்தி கொண்ட அணுவெடிபொருட்களை (tactical gravity nuclear bombs) ஏவக்கூடிய அமெரிக்கா தயாரித்த போர் விமானங்களை வாங்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
பாதுகாப்பு செயலாளர் ஜான் ஹீலி மற்றும் கடற்படை தலைமை அதிகாரி அட்மிரல் சர் டோனி ராடகின் ஆகியோர் இந்த முயற்சியை நேரடியாக வழிநடத்துகிறார்கள்.
பாதுகாப்பு மதிப்பீட்டுச் சர்வதேச ஆய்வு – SDR
புதிய பாதுகாப்பு திட்டங்களை உள்ளடக்கிய Strategic Defence Review (SDR) ஜூன் மாதம் வெளியிடப்படுகிறது.
இது, பிரித்தானிய இராணுவத்தின் பங்கு, திறன்கள் மற்றும் மறுசீரமைப்புகளை மதிப்பீடு செய்து, 2027-ஆம் ஆண்டுக்குள் 2.5% மற்றும் 2034-ஆம் ஆண்டுக்குள் 3% GDP வரை பாதுகாப்பு செலவுகளை உயர்த்தும் குறிக்கோளுடன் செயல்படுகிறது.
பொதுமக்கள் நலனில் பாதிப்பு?
இந்த திட்டத்திற்கு தேவைப்படும் நிதியை உருவாக்க, வெளிநாட்டு உதவித் திட்டங்கள் 0.5 சதவீதத்திலிருந்து 0.3 சதவீதமாக குறைக்கப்படுவதால், சில முன்னாள் அமைச்சர்கள் பதவி விலகியுள்ளனர்.
இது, பாகிஸ்தான், உக்ரைன், சூடான் போன்ற நாடுகளுக்கான உதவிகளை பாதிக்கலாம் என விமர்சனம் எழுந்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
UK nuclear fighter jets 2025, Tactical nukes UK defence, Keir Starmer defence strategy, British jets nuclear weapons, UK US defence talks, Strategic Defence Review UK, NATO nuclear deterrence UK, UK defence budget 3 percent GDP, Cold War UK military expansion, UK overseas aid cuts defence