பிரித்தானியாவிற்கு வரும் மாணவர்கள், தொழிலாளர்களுக்கு eVisa கட்டாயம்
பிரித்தானியாவிற்கு செல்லும் மாணவர்கள் மற்றும் வேலைவாய்ப்பு விண்ணப்பதாரர்கள் இப்போது கட்டாயமாக eVisa எடுத்துக்கொள்ள வேண்டும்.
பிரித்தானிய அரசின் புதிய தீர்மானத்தின் படி, ஜூலை 15, 2025 முதல் வெளிநாட்டு மாணவர்கள் மற்றும் வேலைக்கு வரும் தொழிலாளர்களுக்கு eVisa கட்டாயம் செய்யப்பட்டுள்ளது.
இதன்படி, வேலை அல்லது படிப்பு விசா விண்ணப்பதாரர்கள் இனி பாஸ்போர்ட்-இல் விக்நெட் (vignette) ஸ்டிக்கர் பெறமாட்டார்கள்.
இந்த புதிய முறை, ஒரே நாளில் பயோமெட்ரிக்ஸ் தரவும், பாஸ்போர்ட்டை மீண்டும் வாங்கவும் அனுமதிக்கிறது. இதனால், விசா ஆபீஸுக்கு மீண்டும் வரவேண்டிய அவசியம் இல்லாமல் செய்யப்படுகிறது.
eVisa பெறும் விண்ணப்பதாரர்கள், UKVI (UK Visas and Immigration) கணக்கு கட்டாயம் உருவாக்க வேண்டும். இது மூலமாகவே அவர்கள் தங்களது டிஜிட்டல் விசா மற்றும் குடியிருப்பு தகவல்களை காணலாம்.
தற்போது வரை, வேலை மற்றும் படிப்பு தவிர்ந்த மற்ற விசாக்களுக்கு அல்லது சார்ந்திருப்பவர்களுக்கான (dependant) விண்ணப்பங்களுக்கு மட்டும் vignette வழங்கப்படும். ஆனால் படிப்பு மற்றும் வேலைவாய்ப்பு விசாக்களுக்கு முழுமையான டிஜிட்டல் மாறுதல் நடைமுறைக்கு வருகிறது.
UKVI, பாஸ்போர்ட் ஸ்டிக்கர் அல்லது biometric residence permit-களை (BRP) எதிர்காலத்தில் முழுமையாக கைவிட திட்டமிட்டு, முழு டிஜிட்டல் குடியிருப்பு மற்றும் identity நிர்வாக முறைமைக்கு மாறி வருகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |