பிரித்தானியாவின் புதிய பாஸ்போர்ட் விதி- ஸ்பெயினில் சிக்கிய லண்டன் பெண்
பிரித்தானியாவின் புதிய பாஸ்போர்ட் விதியால் லண்டன் பெண் ஒருவர் ஸ்பெயினில் சிக்கலில் சிக்கயுள்ளார்.
பிரித்தானிய அரசு பிப்ரவரி 25, 2026 முதல் புதிய பாஸ்போர்ட் விதிகளை அமுல்படுத்தியுள்ளது.
இதன்படி, இரட்டை குடியுரிமை (Dual National) கொண்டவர்கள் பிரித்தானியாவிற்கு பயணம் செய்யும்போது, பிரிட்டிஷ் அல்லது ஐரிஷ் பாஸ்போர்ட் அல்லது 589 பவுண்டு மதிப்புள்ள digital certificate of entitlement காட்ட வேண்டும்.
இந்த விதி காரணமாக, லண்டனில் பிறந்து அங்கேயே வாழ்ந்த 26 வயது நடாஷா கோக்ரேன் டி லா ரோசா எனும் பெண் பயணி ஸ்பெயினில் சிக்கியுள்ளார்.

அவர், எப்போதும் போல தனது ஸ்பானிஷ் பாஸ்போர்ட் பயன்படுத்தி பயணம் செய்துள்ளார். ஆனால், திரும்பும் போது easyJet விமானத்தில் ஏற அனுமதி மறுக்கப்பட்டது.
“என் வாழ்நாளில் எப்போதும் ஸ்பானிஷ் பாஸ்போர்ட் பயன்படுத்தியே பிரித்தானியாவிற்கு வந்துள்ளேன். ஆனால் இப்போது திடீரென boarding மறுக்கப்பட்டது” என நடாஷா கூறினார். அவர், பிரிட்டிஷ் பிறப்புச் சான்றிதழ் மற்றும் driving license காட்டினாலும், அது போதுமானதாக இல்லை.
அவரது நிலைமை, பழைய குடியுரிமை சட்டங்கள் காரணமாக சிக்கலானதாக உள்ளது. 1999-இல் பிறந்தபோது, அவரது பெற்றோர் திருமணம் செய்யாததால், தந்தையின் பிரிட்டிஷ் குடியுரிமை தானாக வழங்கப்படவில்லை.
இது குறித்து UK Home Office விளக்கமளித்ததாவது: “2024 அக்டோபர் முதல் இரட்டை குடியுரிமை பற்றிய தகவல் அரசு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 25 பிப்ரவரி 2026 முதல், பிரித்தானியாவிற்கு வருபவர்கள் British passport அல்லது entitlement certificate காட்ட வேண்டும்” என தெரிவித்துள்ளது.
நடாஷா, தற்போது British passport-க்கு விண்ணப்பிக்க வேண்டிய நிலையில் உள்ளார். ஆனால், அது குறைந்தது 6 வாரங்கள் ஆகும். இதனால், அவர் வேலை மற்றும் வாழ்க்கை தொடர்பான சிக்கல்களை சந்திக்கிறார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |